நீண்ட இடைவெளிக்கு பின்பு கம்பேக் கொடுக்கும் நடிகர் விமல்..! கைகொடுக்குமா புதிய படம்..

0
Follow on Google News

சென்னை : களவாணி திரைப்படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் தமிழகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தவர் நடிகர் விமல். அடுத்து அவர் நடித்த ஓரிரு படங்கள் வெற்றியை ருசித்தது. இருந்தபோதிலும் அவரது சமீபத்திய படங்கள் பெரும் சரிவை கண்டதுடன் அவரை கடனாளியாகவும் ஆக்கியது என கிசுகிசுக்கப்பட்டது. சமீபத்தில் ஓடிடியில் வெப்சீரிசாக வெளிவந்த விலங்கு எனும் தொடர் விமலுக்கு நற்பெயர் பெற்றுக்கொடுத்தது.

அதை தொடர்ந்து சில வெப்சீரிஸ்களிலும் சில புதிய படங்களிலும் நடிக்க விமல் ஒப்பந்தமாகியுள்ளார். இதனிடையே கணேஷ் என்டெர்டெய்ன்மெண்ட் சார்பில் டி.ஆர் ரமேஷ் மற்றும் நாஹர் பிலிம்ஸ் சார்பில் ஜாஹீர் ஹுசைன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் கடமையை செய். இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் ஜூன் 24 அன்று தமிழகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. இந்த படம் வெளியானபின்னர் இதே தயாரிப்பாளர்கள் நடிகர் விமலை வைத்து எடுக்கப்பட்டு வரும் மஞ்சள் குடை எனும் படத்தை வெளியிட உள்ளனர். மஞ்சள் குடை திரைப்படத்தில் விமலுக்கு ஜோடியாக வால்டர் படத்தில் நடித்த ஷெரின் கஞ்சவாலா நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர் ரேணுகா ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், விஜய் டிவி புகழ் ராமர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை சிவம் ராஜாமணி இயக்கிவருகிறார். இந்த திரைப்படம் குறித்து அவர் பேசுகையில் ” குடும்பத்தின் பாசப்பிணைப்புக்கள் மற்றும் அதிரடி சண்டைகள் நிறைந்த கதைக்களமாக எடுத்து வருகிறோம்.

இன்றைய காலகட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தின் பெரிய போராட்டமே வீட்டு வாடகை தான். அப்படிப்பட்ட ஒரு நடுத்தற்குடும்பத்தை சேர்ந்த கதாநாயகன் ஒரு வீடு வாங்க நினைக்கிறார். இதில் ஏற்படும் சிக்கல்கள் போராட்டங்கள் குடும்ப செண்டிமெண்ட் அதிரடி என அனைத்தயும் சேர்த்து ரசிகர்கள் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக எடுத்துள்ளோம். போராட்டங்களை மீறி கதாநாயகன் வீடு வாங்கினாரா இல்லையா என்பதே கதை” என இயக்குனர் சிவம் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் மோதல்…. திருமணம் முடிந்த மூன்றே நாளில் வெடித்த பிரச்சனை என்ன தெரியுமா.?