யோவ் விஜய்.. நீ திருந்தவே மாட்டீயா… கழுவி கழுவி ஊத்திய கேரள மக்கள்… இந்த அசிங்கம் தேவை தானா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் கலந்து கொண்டிருந்த போது, அதிரடியாக படப்பிடிப்பு தளத்தில் நுழைந்த  வருமான வரித்துறையினர் விஜயை தட்டி தூக்கி இன்னோவா காரில் கோழி அமுக்குவது போன்று அமுக்கிக் சென்னைக்கு அழைத்து சென்றனர்.அப்போது நெய்வேலியில் விஜய் படப்பிடிப்பில் இருக்கிறார் என்கின்ற தகவல் பரவியதை தொடர்ந்து.

வருமான வரி சோதனை முடிந்து விஜய் மீண்டும் நெய்வேலி படப்பிடிப்பிற்கு வந்தபோது ஏராளமான விஜய் ரசிகர்கள் அங்கே கூடியிருந்த போது, வேன்மீது ஏறிக்கொண்டு அந்த ரசிகர் கூட்டத்தை செல்பி எடுத்தார் விஜய். இந்நிலையில் சமீபத்தில் அரசியல் கட்சி பெயரை அறிவித்த விஜய், களத்தில் இறங்கி அரசியல் செய்வார் என மக்கள் எதிர்பார்த்தால், ரசிகர்களை கூட்டமாக சேர்த்து அடிக்கடி செல்ஃபீ எடுத்து விளையாடி கொண்டிருக்கும் விஜய், இப்படி செல்பி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.

விஜய் இவ்வாறு செல்பி  அரசியல் செய்வதால் படப்பிடிப்பு தளத்தில் அவருடைய ரசிகர்கள் எந்த ஒரு முன் அனுமதி பெறாமல் பொது இடத்தில பெரும் கூட்டம் கூடுவது அந்த பகுதியில் போக்குவரத்து மிக பெரிய இடையூறு ஏற்படுகிறது மேலும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள்.

சமீபத்தில் சென்னையில் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொண்ட தகவல் அறிந்து விஜய் ரசிகர்கள் பெருமளவு கூடி மிகப்பெரிய போக்குவரத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்தினார்கள். மேலும் தமிழ்நாட்டில் போன்று பாண்டிச்சேரியில் விஜய் கலந்து கொண்ட படப்பிடிப்பில் ரசிகர்களை ஓன்று கூட்டி, வேன் மீது நின்று செல்பி எடுத்து விளையாட ஆசைப்பட்டுள்ளார். உடனே புஸ்ஸி ஆனந்துக்கு விஜய் தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்க, விஜய் ரசிகர் மன்றங்கள் வழியாக வாட்ஸ் ஆப்பில் விஜய் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பில் இருக்கிறார் என்கிற தகவல் பரவியதை தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் பெரும் ரசிகர்கள் கூட்டம் கூடியது.

இப்படி ரசிகர்களை உசுப்பேத்தி விட்டு, பெரும் கூட்டத்தை கூட்டி, தான் நினைத்தது போன்று ஜம்முனு செல்பி எடுத்துவிட்டு கம்முனு கிளம்பி போய்விட்டார் விஜய், ஆனால் அங்கே கூடியிருந்த விஜய் ரசிகர்கள் சாலைகளை ஆக்கிரமித்து கொண்டு போக்குவரத்துக்கு  மிகப்பெரிய இடையூறை ஏற்படுத்துவதால் பொதுமக்கள் மிக பெரிய அளவில் சிரமத்துக்கு உள்ளாகி  வருகின்றனர்.

இதனிடையே தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், இந்த படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ளார். விஜய் கேரளா வரும் தகவலை  கேரளா ரசிகர் மன்றங்கள் வாயிலாக பரவ செய்துள்ளார்கள்.  இதனால் விஜயை பார்க்க ரசிகர்கள் பட்டாளம் விமான நிலையத்தில் திரண்டது. விஜயை காண ரசிகர்கள் அதிகமாக சூழ்ந்ததால் நடிகர் விஜயின்  காரில் கண்ணாடிகள் உடைந்து சிதறிய நிலையில், கீறல்கள் விழுந்து முழுவதும் சேதமடைந்தது.

மேலும்  படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜயை காண ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் கூட வைத்து    படப்பிடிப்பு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனம் ஒன்றின் மீது ஏறி வழக்கம் போல் விஜய் செல்ஃபி எடுத்து விளையாடினார். இந்த நிலையில் விஜய் இவ்வாறு செல்ஃபி எடுத்து விளையாடுவதற்காக படப்பிடிப்பு தளத்தில் மிக பெரிய அளவில் கூட்டத்தை கூட்டியது அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாகவும் இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யை பார்க்க கூடிய கூட்டத்தினால் சிரமத்துக்கு உள்ளான கேரள மக்கள் கடும் கோபத்தில் விஜய்யையும் அங்கே கூடியிருந்த ரசிகர்களையும் கழுவி கழுவி ஊத்துவதை பார்க்க முடிந்தது, மேலும் நடிகர் பின்னாடி ஓடும் தமிழ்நாட்டு கலாச்சாரம் கேரளாவில் பரவ தொடங்கிவிட்டது என கேரள மக்கள் வேதனை தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது.