விஜய் மீது கடும் கோபத்தில் மகன் சஞ்சய்… மகனுக்கு முழு எதிரியாக மாறிய விஜய்…

0
Follow on Google News

ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக கடந்த ஆண்டு அப்டேட் வெளியாகி இருந்தது. மேலும் சஞ்சய் இயக்க உள்ள படத்தில் கவின் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் என்றும் செய்திகள் வெளி வந்த வண்ணம் இருந்தன. இது தவிர படம் குறித்த வேறு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. தற்போது சஞ்சய் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே நிறைய குளறுபடிகளை சந்தித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்து சினிமாவுக்கு டாட்டா காட்டியுள்ள நிலையில், அவரது மகன் தனது முதல் படத்தை தமிழில் இயக்கப் போவதாக கூறி சினிமாவிற்குள் இயக்குனராக என்ட்ரி கொடுக்க உள்ளார். அப்பாவைப் போலவே சினிமாவில் மிகப்பெரிய ஹீரோவாக வருவார் என்று விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில் ஜேசன் சஞ்சையின் இந்த முடிவு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.

கனடாவிலும் லண்டனிலும் பிலிம் மேக்கிங், டைரக்ஷன் பற்றிய படிப்புகளை படித்து முடித்த சஞ்சை, எந்த இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணி புரியாமல் நேரடியாக தனது முதல் படத்தை இயக்கப் போவதாக அறிவித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதேசமயம் சஞ்சய் இயக்கம் முதல் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது யார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

விஜய் ரசிகர்கள் பலரும் விஜயை வைத்து தான் சஞ்சய் படம் பண்ணுவார் என்று இணையத்தில் விவாதம் செய்து வந்தனர். ஆனால் அது இல்லை என்பது உறுதியாகி விட்டது. இதைத்தொடர்ந்து சமீப காலமாக இணையம் முழுவதும் சஞ்சய் இயக்கும் படத்தில் துரு விக்ரம் நடிக்க உள்ளதாக செய்திகள் வலம் வந்தன. இதற்கிடையில், விஜய் மகன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக நடிக்க வைக்க கேட்டிருந்ததாகவும், அதற்கு சிவகார்த்திகேயன் நோ சொல்லிவிட்டதாகவும் தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அதாவது சஞ்சய் தனது படத்தின் கதையை சிவகார்த்திகேயனிடம் சொல்லி இருக்கிறார். முழு கதையையும் கேட்ட சிவகார்த்திகேயன், இது எனக்கான கதை கிடையாது என்னுடைய படங்களில் சில கமர்சியல் விஷயங்கள் எல்லாம் இருக்கணும் என்று கூறி கதையை ரிஜெக்ட் செய்து விட்டாராம். என்னதான் சிவகார்த்திகேயன் இப்படி சாக்குப் போக்கு சொல்லி கதையை ரிஜெக்ட் செய்தாலும், சஞ்சய் படத்தை மறுத்ததற்கு விஜய் தான் முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

அதாவது சஞ்சய் விஜயின் அனுமதி இல்லாமல் தான் முதல் படத்தை இயக்க இருக்கிறார் என்றும், இந்த நேரத்தில் சஞ்சையின் படத்தில் ஹீரோவாக நடித்தால் விஜய் மற்றும் விஜய் ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் எண்ணிய சிவகார்த்திகேயன் அச்சத்தில் கதையை ரிஜெக்ட் பண்ணி விட்டதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதாவது விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவுக்கு இடையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தற்பொழுது விஜய் மற்றும் அவரது மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதால், விஜய் மகன் சஞ்சய் அவருடைய அம்மா பக்கம் உள்ளாராம், அந்த வகையில் தற்பொழுது சஞ்சய் இயக்கும் படத்தின் வாய்ப்பு கூட லண்டனில் இருக்கும் சங்கீதா தந்தை சிபாரிசில் தான் கிடைத்தது என கூறப்படுகிறது.

இந்நிலையில் சஞ்சய் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் விஷயம் பற்றி செய்தியில் வெளியாகும் வரை விஜய்க்கு தெரியாது என்றும், அந்த வகையில் தந்தை விருப்பம் இல்லாமலே சஞ்சய் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது. அதனால் சஞ்சய் இயக்கத்தில் நடித்தால் விஜய் கோபத்துக்கு உள்ளாக வேண்டும் என்பதால் பலரும் தயக்கம் காட்டி வருவதால், சஞ்சய் சினிமா கேரியருக்கு அவருடைய தந்தையே இடையூறாக இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.