விஷால் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படம்… கதை என்ன தெரியுமா.?

0
Follow on Google News

விஷால் நடிப்பில் வெளியாக இருக்கும் மார்க் ஆண்டனி படத்தின் டீசரை நடிகர் விஜய் சமீபத்தில் வெளியிட்டார். பொதுவாக நடிகர் விஜய் தன்னுடைய படத்தை தவிர்த்து பிற படங்களின் டீசர் மற்றும் ட்ரைலர், ப்ரொமோஷன் போன்ற எந்த ஒரு நிகழ்வுகளிலும் பங்கேற்க மாட்டார். குறிப்பாக விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கும் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் கூட கலந்து கொள்ள மாட்டார் விஜய்.

இப்படி இருக்கையில் எதற்காக திடீரென்று நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி நீ படத்தின் டீசரை விஜய் வெளியிடுவதற்கான காரணங்கள் பற்றி விசாரித்தததில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. விஷாலுக்கு ஆரம்பத்தில் நடிகராக வேண்டும் என்கின்ற ஆசை துளியும் இல்லை. அவருக்கு இயக்குனராக வேண்டும் என்கின்ற ஆசையில் தான் சினிமா துறையில் பல திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.

ஆனால் எதிர்பாராத விதத்தில் விஷால் செல்லமே படத்தின் மூலம் கதாநாயகனாக உருவாகி அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கியவர், இயக்குனராக வேண்டும் என்கிற விஷாலின் கனவு இன்றளவு நிறைவேறாமலே உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஷாலுக்கும் நடிகர் விஜய்க்கும் இடையில் நீண்ட காலமாக ஒரு நெருங்கிய நட்பு இருந்து வந்துள்ளது. அந்த வகையில் பலமுறை நடிகர் விஷாலை நேரில் அழைத்து விஜய் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளார்.

விஷால் நடித்த அவன் இவன் படத்தை பார்த்த விஜய், உடனே நேரில் விஷாலை அழைத்து அந்த படத்தில் பாலா எந்த மாதிரி எல்லாம் உங்களை வேலை வாங்கினார் என்கின்ற ஒரு சுவாரசியமான தகவல்களை விஷாலிடம் கேட்டு சிரித்து மகிழ்ந்துள்ளார். அந்த அளவுக்கு நடிகர் விஷாலுக்கும் விஜய்க்கும் இடையில் நெருங்கிய நட்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் மார்க் ஆண்டனி டீசரை விஜய் வெளியிட்ட பின்பு, விஜய் – விஷால் சந்திப்பு நீண்ட நேரம் நடைபெற்றுள்ளது. அதில் பல விஷயங்கள் பேசப்பட்டுள்ளது.அப்போது விஷால் நான் சினிமாவுக்கு வந்ததே இயக்குனராக வேண்டும் என்பதற்காக தான், அந்த வகையில் இன்னும் எனக்குள் இயக்குனர் விஷால் இருந்து கொண்டே தான் இருக்கிறான், உங்களுக்காக இரண்டு கதை தயார் செய்துள்ளேன், உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது கூப்புடுங்க, கதை சொல்லுகிறேன் என தெரிவித்த விஷால்.

மேலும் தற்பொழுது உங்களின் அரசியல் என்ட்ரிக்கு வலு சேர்க்கும் வகையில் அரசியல் பஞ்ச் உடன் கமெர்ஷியலான ஆக்ஷ்ன் படமாக இருக்கும் என விஷால் தெரிவிக்க, அதற்கென்ன பார்க்கலாம், இது குறித்து விரைவில் பேசுவோம் என விஜய் தெரிவித்துள்ளார், இதன் பின்பு விஜய்யின் சமீபகால அரசியல் நகர்வுகள் பற்றி தனக்கு வந்த தகவல்களை விஜய்யிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் விஷால்.

மேலும் நடிகர் விஷாலுக்கு நீண்ட காலமாகவே அரசியல் ஆசை உண்டு. அதனடிப்படையில் தான் நடிகர் சங்கம் தேர்தலுக்கு பின்பு நடந்த ஆர்.கே.நகர் இடைதேர்தலில் விஷால் களம் இறங்கினார், ஆனால் பல்வேறு காரணங்களால் விஷாலால் வெற்றி அந்த தேர்தலில் போட்டியிட முடியவில்லை. இந்நிலையில் தன்னுடைய அரசியல் ஆசையை விஜய்யிடம் வெளிப்படுத்திய விஷால். இதுவரை உங்களுடைய ரசிகராக இருந்து வந்துள்ளேன்.

நீங்கள் அரசியல் என்ட்ரி கொடுக்கும் பொழுது உங்களை தலைவனாக ஏற்று கொண்டு, உங்கள் அரசியலுக்கு ஒரு அணிலாக இருந்து உதவ தயார் என விஜய்யிடம் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார் விஷால். அதற்கு விஜய், உங்கள் இந்த முடிவை சந்தோசமாக வரவேற்கிறேன், என்னுடைய அரசியல் பயணத்தில் உங்களுக்கும் இடமுண்டு என விஷாலுக்கு விஜய் உறுதியளித்துள்ளதாக கூறப்டுகிறது.

இந்நிலையில் திருச்சியில் மிக பிரமாண்டமாக அரசியல் மாநாடு போன்று விஜய் தன்னுடைய ரசிகர்கள் சந்திப்பு கூட்டத்தை நடந்த திட்டமிட்டுள்ள நிலையில், அந்த அரசியல் மேடையில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளான புஸ்லி ஆனந்த் போன்றோர் உடன் விஷாலும் இடம் பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.