அட்லீ ஆசைக்கு ஆப்பு வைத்த விஜய்… விஜய் அந்த விஷயத்தில் மிக தெளிவு தான்…

0
Follow on Google News

விஜய் லியோ படத்தை முடித்துவிட்டு அட்லியுடன் இணைந்து மீண்டும் ஒரு படம் பண்ணுவதாக தான் இருந்தது. அதற்காக அட்லீயிடம் கதை கேட்ட விஜய், அந்த கதையின் முழு ஸ்கிரிப்ட்டை தயார் செய்யவும் அட்லீயிடம் வலியுறுத்தி இருந்தார்.அட்லீயும் ஜவான் படத்தை முடித்துவிட்டு தயார் செய்துவிடுகிறேன் அண்ணா என தெரிவிக்க, அட்லீ – விஜய் கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

லியோ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் அட்லி இயக்கும் ஜவான், விஜய் நடிக்கும் லியோ படம், இந்த இரண்டு படங்களிலும் இருவரும் முடித்துவிட்டு விஜய் 68 படத்தில் அட்லி மற்றும் விஜய் இருவரும் மீண்டும் இணைய இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த படத்தை சன் பிக்ச்சர் தயாரிக்க இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை பேசி முடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

சுமார் 400 கோடி பட்ஜெட்டில் விஜய் – அட்லீ இனையும் படம் மிக பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டிருந்த நிலையில், லியோ படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்த இயக்குனர் அட்லீயை கழட்டிவிட்டுள்ளார் விஜய்.அட்லியை விஜய் கழட்டி விடுவதற்கு முக்கிய காரணம். அட்லி சொன்ன தேதியில் படத்தை எடுத்து முடிக்க மாட்டார், காலம் தாமதம் செய்து வருவார் என்பதுதான்.

அந்த வகையில் தற்பொழுது நடிகர் விஜய் அரசியலில் என்ட்ரி கொடுத்திருப்பதால், லியோ படத்தை முடித்துவிட்டு, ஒரு கமர்சியல் ஹிட் படமான இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து அரசியலில் வேலைகள் நிறைய இருப்பதால், வெங்கட் பிரபு இயக்கும் படத்திற்கு மிக குறுகிய நாள் கால் சீட் மட்டுமே விஜய் கொடுத்துள்ளார்.

அட்லியை விஜய் கழட்டி விடும்போது, விஜய் அரசியலில் என்ட்ரி கொடுப்பது உறுதியாகி விட்டது, அதனால் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதால், அதிக நாள் கால் சீட் கொடுக்க முடியாது, அதே போன்று அட்லீயால் மிக குறுகிய நாட்களில் படத்தை எடுத்து முடிக்க முடியாது, அதனால் தான் அட்லீ ப்ரோஜெட்டில் இருந்து விலகுவதாக விஜய் இயக்குனரை மற்றும் முடிவுக்கு வந்து அட்லீயை கழட்டி விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து விஜயை வைத்து மூன்று படங்கள் இயக்கிய அட்லீ, அடுத்து பாலிவுட்டில் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். அந்த வகையில் இனி தன்னுடைய அடுத்த படமும் பெரிய நடிகரை வைத்து தான் இயக்க வேண்டும் என்கிற ஆசையில் இருக்கும் அட்லீ, தமிழ் சினிமாவில் தனக்கு விஜய் அண்ணாவை விட்ட வேறு ஆள் இல்லை, விஜய் அண்ணாவை மண்டையை கழுவி வாய்ப்பை பெறுவதற்கான முயற்சியில் அட்லீ இறங்கி இருக்கிறார்.

அந்த வகையில் லியோ படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கம் படத்தில் கமிட்டாகி உள்ள விஜய், அந்த படத்தை முடித்துவிட்டு வெறும் 30 நாள் கால் சீட் கொடுத்தால் போதும், என்னிடம் அருமையான கதை ஒன்று உள்ளது, விஜய் அண்ணா வெங்கட்பிரபு படத்தை முடித்து வரும் வரை நான் காத்திருக்கிறேன் என அட்லீ விஜய்க்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் விஜய், 30 நாளில் அட்லீ படம் எடுத்து முடிப்பதா, இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என்று, அட்லீயை நம்ப முடியாது என்றும், மேலும் வெங்கட் பிரபு ப்ரோஜெட்டை முடித்துவிட்டு அரசியல் வேலை நிறைய இருப்பதால், அட்லீயை நம்பி எதையும் செய்ய முடியாது என விஜய் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.