விஜயை வெச்சு பட எடுத்தா நடு தெரு தான்… இதுல இவர் சூப்பர் ஸ்டாரா.? கலாநிதிமாறன் கோபத்தின் பின்னணி இது தான்..

0
Follow on Google News

சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ரஜினிகாந்த் – விஜய் இருவருக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜெயிலர் பட ஆடியோ வெளியிட்டு விழாவில் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஜினிகாந்த் பேசிய பேச்சு அனைவரும் எதிர்பார்த்த ஓன்று தான், ஆனால் யாரும் எதிர்ப்பாராத விதமாக நடிகர் விஜய்யை தாக்கியும், ரஜினியை புகழும் வகையில் பேசியிருந்தார் காலநிதிமாறன்.

ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை குறித்து பேசிய கலாநிதிமாறன், என் அப்பாவும் ரஜினியின் ஸ்டைலுக்காகவே படத்தை பார்ப்பாங்க.என்னைப் பற்றி சொல்லவே தேவையில்லை நான் ரஜினியோட எந்த அளவுக்கு ரசிகன் என்பதை அனைவருக்கும் தெரிந்தது. அதே மாதிரி என் பொண்ணு என்னை விட ஒரு பங்கு மேலே ரஜினி படம் என்றால் அந்த அளவுக்கு ரசித்துப் பார்ப்பார்.

மூன்று வயது குழந்தைகள் கூட ரஜினியின் பாடல்கள் வந்தால் அவ்வளவு சுறுசுறுப்பாக மாறிவிடுகிறார்கள். இப்படி ஐந்து தலைமுறையாக அவரை கொண்டாடி வருகிறோம். மேலும் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு போட்டி இருக்கிறது. ஆனால் ரஜினியுடன் போட்டி போடுவதற்கு வேறு யாராலயும் முடியாது. அவரை தான் அவருக்கு போட்டி. அது மட்டுமில்லாமல் சினிமாவிற்கு புதுசாக நடிக்க வரவங்களும் சரி, ஏற்கனவே முன்னணியில் இருப்பவர்களும் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி போட்டு வருகிறார்கள்.

ஆசைப்படுவது தப்பில்லை, ஆனால் அவர்கள் எல்லாத்துக்கும் ஒன்னே ஒன்னு தான் சொல்லிக் கொள்கிறேன். ரஜினி அவர்களுக்கு தற்போது 72 வயதாகிறது, இப்பொழுதும் இவரை நடிக்க வைப்பதற்கு தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். அதே மாதிரி உங்களுக்கும் 72 வயதில் இதே மாதிரி தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்னு காத்திருந்தால் அப்பொழுது சொல்லுங்கள் ரஜினியின் இடத்துக்கு வந்து விட்டேன் என்று. அதுவரை தமிழ்நாட்டில் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும் தான் என கலாநிதிமாறன் பேசியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜயை மறைமுகமாக தாக்கும் வகையில் கலாநிதிமாறன் எதற்கு எப்படி பேசினார், விஜய்யை வைத்து அவரும் படங்கள் தயாரித்துள்ளார், அப்படி இருக்கையில் விஜய் மீது தயாநிதிமாறனுக்கு ஏன் இந்த கோபம் என சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில்,சில தகவல் வெளியாகியுள்ளது, அதில் விஜய்யை வைத்து சன் பிக்சர் தயாரித்த அத்தனை படமும் அட்ட பிளாப், இதனால் பெரும் தொகை சன் பிக்சர்க்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும்.

குறிப்பாக, சுறா , பீஸ்ட், சர்க்கார் போன்ற படங்களை விஜய்யை வைத்து சன் தயாரித்ததில் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சுறா படத்தினால் மிக பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது சன் பிக்சர், இந்நிலையில் சன் பிக்சர் தயாரிப்பில் அண்ணாத்தே படம் எதிர்ப்பார்த்தது போன்று போகவில்லை என்றாலும் கூட ரஜினி தன்னை வைத்து படம் எடுத்த சன் பிக்சர்க்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்யும் வகையில்,தன்னுடைய சம்பளத்தை குறைத்து கொண்டு மீண்டும் ஜெயிலர் படத்தில் நடிக்க கால்சீட் கொடுத்தார்.

ஆனால் விஜயை வைத்து சுறா, பீஸ்ட் போன்ற மொக்க படங்களை எடுத்து மிக பெரிய நஷ்டத்தை சந்தித்த சன் பிக்சருக்கு ரஜினி போன்று எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை விஜய் என்றும், அந்த கோபத்தின் வெளிப்பாடு தான் , ஜெயிலர் ஆடியோ நிகழ்ச்சியில், ரஜினியை புகழ்ந்து, விஜய் மறைமுகமாக கலாநிதிமாறன் பேசியதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.