தோலுக்கு மேல் வளர்ந்த மகனை இப்படியா நடத்துவதா… இப்ப வருத்தப்பட்டு என்ன.. விஜய்க்கும் ரோசம் இருக்கும்ல..

0
Follow on Google News

இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர், மேலும் இந்த சமூகத்துக்கு என்ன தேவையோ அதன் சார்ந்து பல படங்களை இயக்கியவர். அந்த வகையில் ஒரு படத்தின் கதை , திரைக்கதை எப்படி இருக்க வேண்டும் என்பது நன்கு கற்றுத் தேர்ந்தவர் எஸ் ஏ சந்திரசேகர். இந்நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் அவருடைய மகன் விஜய்யை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது தொடங்கி மகனை விட்டு பிரியும் வரை விஜய் நடிக்கும் படத்திற்கான கதையை கேட்டு அவரே தேர்வு செய்து வந்துள்ளார்.

அப்படி எஸ்.ஏ . சந்திரசேகர் கதை கேட்டு தேர்வு செய்து விஜய் நடித்த துப்பாக்கி போன்ற பல படங்கள் நடிகர் விஜய்யின் சினிமா வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக தந்தையுடன் ஏற்பட்ட மன கசப்பின்னால் விஜய் அவருடைய படத்தின் கதையே அவரே கேட்டு வருகிறார், இதில் அவருடைய தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தலையிடுவது கிடையாது.

விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் கதை சரியில்லை என்று வெளிப்படையாகவே எஸ் ஏ சந்திரசேகர் விமர்சனம் செய்தது, தன்னுடைய மகன் மீது உள்ள ஆதங்கம் தான், அந்த வகையில் விஜய் படத்தின் கதையை தேர்வு செய்யும் இடத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இருந்திருந்தால் உறுதியாக பீஸ்ட் படத்தின் கதையை ரிஜெக்ட் செய்திருப்பார் எஸ்.ஏ.சந்திரசேகர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் தன்னுடைய மகன் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கான வேலைகளில் கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பு தொடங்கினார், ஆனால் அதற்கு விஜய், இப்போது வேண்டாம், அவசரப்பட வேண்டாம் அதற்கான நேரம் வரட்டும் என காலம் தாழ்த்திக் வந்துள்ளார்.

இருந்தும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்பதாக இல்லை. இதுதான் சரியான தருணம் என விஜய் அரசியலுக்கு உடனே வரவேண்டும் என அவசரப்பட்டார். இந்த விவகாரம் தான் விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கும் இடையில் ஏற்பட்ட முதல் பிரச்சனை. அதன் பின்பு இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கையிலே ஒரு முறை தன் மகனிடம் அளவுக்கு அதிகமாக தன்னுடைய கோபத்தை எஸ் ஏ சந்திரசேகர் வெளிப்படுத்தியதின் விளைவுதான் ஒரேடியாக தந்தை மகன் இருவரும் பிரிவதற்கு காரணமாக அமைந்தது.

குறிப்பாக ஒரு தந்தை தோலுக்கு மேல் வளர்ந்த தன்னுடைய மகனிடம் எப்படி நடந்து கொள்ளக் கூடாதோ.!அந்த அளவுக்கு மோசமாக விஜயிடம் நடந்து கொண்டுள்ளார் அவருடைய தந்தை எஸ் எஸ் சந்திரசேகர். இதன் பின்பே தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை விட்டு நிரந்தரமாக விஜய் பிரிவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் எஸ்.ஏ சந்திரசேகர் தன் மகனை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தாலும் கூட, தன் மகனை நினைத்து மிகவும் வருத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் தன் மகனை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தான் மகனிடம் நெருங்கி இருப்பதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்து வரும் எஸ்.ஏ.சந்திரசேகர். மேலும் விஜய்யுடன் நெருங்கி பழகக் கூடியவர்கள் சில பொருட்களை மந்திரவாதிகளிடம் மந்திரித்து அவர்கள் கைவசம் வைத்துக்கொண்டு விஜய்யை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து ஆட்டுவிக்கிறார்கள் என்றும் மகனைப் பற்றி வருத்தத்துடன் எஸ் ஏ சந்திரசேகர் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தன்னுடைய தந்தை தன்னுடைய வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு கஷ்டப்பட்டுள்ளார் என்பதை, நடிகர் விஜய் ஒரு நிமிடம் சிந்தித்து பார்த்தால் போதும், அடுத்த நிமிடமே அவர் தந்தையுடன் இணைந்து விடுவார் அந்த அளவுக்கு பல சுமைகளை விஜயின் வளர்ச்சிக்காக தாங்கிக் கொண்டுள்ளார் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் என்பது குறிப்பிடதக்கது.