விஜய்க்கு ஆப்பு வைத்த அவரது ரசிகர்கள்… இருந்ததும் போச்சே… இது தேவை தானா.?

0
Follow on Google News

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் சமீபத்தில் நடந்த வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பல அட்ராசிட்டிகள் அரங்கேறியது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவில்லை. இது விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு விஜய் நடித்த படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

ஆடியோ நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வெளியே இருந்த ரசிகர்கள் அரங்கிற்கு யார் முதலில் நுழைவது என ரசிகர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசலில் அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விஜய் ரசிகர்களால் கீழே தள்ளிவிட்டு, அதனால் போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. விஜய் ஆடியோ வெளியீட்டு நடந்த நேரு உள் விளையாட்டு அரங்கில் பெரும்பாலான இருக்கைகளை விஜய் ரசிகர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

சேதம் அடைந்த இருக்கைகளுக்கான அவதாரத்தை தயாரிப்பு நிறுவனத்திடம் வசூல் உள்ளது நேரு உள் விளையாட்டரங்கத்தின் நிர்வாகம். இந்த நிலையில் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவதால், மேலும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் துணிவு படத்தை நேரடியாக தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் வெளியிடுகிறது என்பதால் பெரும்பாலான திரையரங்குகள் துணிவு படத்திற்கு புக்கிங் செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஏற்கனவே திரையரங்குகள் கிடைக்காமல் பல்வேறு போராட்டங்களுக்கு பின்பு வாரிசு படத்தின் தயாரிப்பாளர் கடும் முயற்சியில் தமிழகத்தில் திரையரங்குகளை புக்கிங் செய்து வருகின்றார். இந்த நிலையில் சமீபத்தில் நேரு உள் விளையாட்டில் அரங்கில் நடந்த வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில், விஜய் ரசிகர்கள் பெரும்பாலான இருக்கைகளை சேதப்படுத்தியது வாரிசு படம் வாங்கி வெளியிட்டால் தங்கள் திரையரங்குகளில் இருக்கைகள் விஜய் ரசிகர்களிடமிருந்து தப்பிக்குமா என்கின்ற அச்சம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் பெரும்பாலான திரையரங்குகள் உரிமையாளர்கள் வாரிசு படத்தை வாங்கி வெளியிடுவதற்கு தயக்கம் காட்டுவதாகவும், மேலும் வாரிசு படத்தை வெளியிட்டு தங்கள் திரையரங்குகளில் பொருட்களுக்கு சேதாரம் ஏற்பட்டால் அதை தயாரிப்பு நிறுவனம் சரி செய்து தருவதற்கு முன் வந்தால், வாரிசு படத்தை வெளியிடுகிறோம் என்றும் சில திரையரங்கு உரிமையாளர்கள் கண்டிஷன் போடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் வாரிசு படத்தை வெளியிட ஏற்கனவே த திரையரங்கு கிடைக்காமல் பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில் தற்போது விஜய் ரசிகர்களின் அட்ராசிட்டியால் விஜயின் வாரிசு படம் மீண்டும் சிக்கலில் சிக்க வைத்து விஜய்க்கு அவரது ரசிகர்கள் ஆப்பு வைத்து விட்டு சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவில் விஸ்வரூபம் எடுக்கும் ஹனி ட்ராப் விவகாரம்… அண்ணாமலையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன.?