நன்றி மறந்த விஜய், சூர்யா.. விஜயகாந்திடம் இப்படி நடந்து கொள்ளலாமா.? என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி, கமல் இணையாக முன்னணி நடிகராக இருந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் நடிகர் விஜயகாந்த். அணைத்து தரப்பு ரசிர்கர்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த காலம் நடிகர் சங்கத்துக்கு பொன்னான காலம் என்றே சொல்லலாம், கடனில் தத்தளித்த நடிகர் சங்கத்தை மீட்டு எடுத்த பெருமை நடிகர் விஜயகாந்தை தான் சேரும்.

உதவி மனப்பான்மை கொண்ட நடிகர் விஜயகாந்த் ஏழை எளிய மக்களுக்கு பல நல திட்ட உதவிகளை செய்து வந்தவர். அது மட்டும் இன்றி தான் சார்ந்த சினிமா துறையினர் கஷ்டத்திலும் பங்கேற்று அவர்கள் வாழ்க்கையில் ஒளி வீச முக்கிய காரணமாக இருந்தவர் விஜயகாந்த், இவரால் சினிமா துறையில் பலன் அடைந்தவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

நடிகர் வடிவேலுவுக்கு சின்ன கவுண்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்று தந்த நடிகர் விஜயகாந்த். அப்போது வடிவேலு மாற்று துணி இல்லாமல் கஷ்டப்பட்டபோது அவர்தான் வடிவேலுக்கு பத்து வேஷ்டியும் 10 சட்டையும் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் நன்றி உணர்வு இல்லாமல் வளர்ச்சி அடைந்ததும் நடிகர் விஜயகாந்தை எதிர்த்து சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் போனார் வடிவேலு.

அதேபோன்று ஒரு முறை தனுஷ் வீட்டிற்கு சென்றுள்ளார் விஜயகாந்த். அப்போது கஸ்தூரிராஜா தனது இரண்டாவது மகளுக்கு ஒரு மார்க் பத்தாமல் மருத்துவ சீட்டு கிடைக்கவில்லை என விஜயகாந்த்திடம் சோகத்துடன் புலம்பியுள்ளார். இதைக் கேட்ட விஜயகாந்த் உடனே என் கூட வாங்க என அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று, ராமச்சந்திரா கல்லூரி உடையார் அவர்களை விஜயகாந்த் வீட்டிற்கு அழைத்து பேசியுள்ளார்.

இதன் பின்பு கஸ்தூரிராஜா இரண்டாவது மகளுக்கு மருத்துவ படிக்க உதவி செய்துள்ளார் விஜயகாந்த். இதுபோன்று சினிமா துறையைச் சேர்ந்த பலருக்கு உதவி செய்துள்ள விஜயகாந்த் தன்னுடைய இமேஜ் பற்றி சற்றும் கவலைப்படாமல் வளர்ந்து வரும் நடிகர்கள் தன்னுடைய படத்தில் அவர்களுக்கு முக்கிய கதாபாத்திரங்கள் கொடுத்து அவர்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வந்தார்.

பொதுவாக நடிகர் ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் நடிக்கும் படத்தில் தங்களை தாண்டி மற்ற நடிகர்கள் ஓவர் டெக் செய்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். ஆனால் விஜயகாந்த் அதை எல்லாம் பொருட்படுத்த மாட்டார். நடிகர் விஜயகாந்த் உடன் ஒரு படம் நடித்தால் மக்கள் மத்தியில் எளிதாக சென்று அடைந்து விடுவார் விஜய் என்பதற்காக செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் தம்பியாக விஜய் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் விஜயகாந்த்.

அந்த வகையில் நடிகர் விஜய் வளர்ச்சிக்கு இதில் விஜயகாந்து முக்கிய பங்காற்றியுள்ளார். அதேபோன்று நடிகர் சூர்யா மக்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக விஜயகாந்த் உடன் பெரியண்ணா படத்தில் இணைந்தார். இப்படி பல நடிகர்கள் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்து வருகிறார்.

விஜய் சூர்யா போன்ற நடிகர்களின் சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வரும் நிலையில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா போன்றவர்கள் நேரில் சென்று அவர் உடல் நிலை குறித்து விசாரிக்காமல் இருந்து வருவது பல்வேறு விமர்சனங்கள் அவர்கள் மீது எழுந்துள்ளது.