கெட்ட வார்த்தைகள்… நெஞ்சில் எட்டி உதைத்தார் வடிவேலு… தனக்கு நடந்த சம்பவத்தை போட்டுடைத்த போண்டாமணி..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர் போண்டாமணி. நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை காட்சிகளின் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சுவாச பிரச்சனை காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் போண்டா மணி, சிறுநீரக மாற்று சிகிச்சை செய்வதற்கு தனக்கு உதவும்படி வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார் போண்டாமணி.

இதனை தொடர்ந்து சினிமா துறையை சேர்ந்த பல நடிகர்கள் போண்டா மணிக்கு பண உதவி செய்தனர். இந்த நிலையில் அப்போது, போண்டாமணி உடன் அதிக படங்கள் இணைந்து நடித்த வடிவேலுவை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொன்டு போண்டாமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர் தனக்கு உதவி செய்யுமாறு வீடியோ வெளியிட்டுள்ளார், நீங்கள் உதவி செய்வீர்களா என கேட்ட போது,

அதற்கு வடிவேலு, என்னுடன் பல படங்களில் உடன் நடித்தவர் நடிகர் போண்டா மணி. அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருக்கும் செய்தி அறிந்தேன். அவருக்கு நிச்சயம் உதவி செய்வேன் என்று வடிவேலு தெரிவித்தார். ஆனால் வடிவேலுவின் பேட்டியை பார்த்த போண்டாமணி மிகுந்த எதிர்பார்ப்புடன் வடிவேலு தனக்கு உதவி செய்வார் என ஆவலுடன் இருந்துள்ளார். ஆனால் எந்த ஒரு உதவியும் வடிவேலு செய்யாததால் போண்டாமணி மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாக கூறப்பட்டது.

இதன் பின்பு சிகிச்சை முடித்து பூரண குணம் அடைந்த போண்டாமணி, சில காலம் ஓய்வுக்கு பின்பு சமீபத்தில் ஒரு யூ ட்யூப் சேனல் ஒன்றி பேட்டி கொடுத்துள்ளார், அதில் வடிவேலுவைப்பற்றி பலரும் அறியாத விசயங்களை வெளிப்படுத்தியுள்ளார் போண்டாமணி, இந்த பேட்டியை பார்த்தவர்கள், வடிவேலு இந்த அளவுக்கு இரக்கம் இல்லாத கொடூர குணம் கொண்டவரா.? என்று பேசும் அளவுக்கு அமைந்துள்ளது போண்டாமணியின் பேட்டி.

போண்டாமணி அந்த பேட்டியில் பேசுகையில், வடிவேலு கூட்டணியில் இணைந்து பல படங்கள் நடித்தேன், ஆனால் வடிவேலு தன்னுடன் இருக்கும் யாரையும் முன்னேற விடமாட்டார். அவருடன் இருப்பவர்களை அவரின் காலடியில் தான் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அவருடன் இருக்கும்போது பல அவமானங்களை சந்தித்துள்ளேன் என வேதனையை வெளிப்படுத்திய போண்டா மணி.

தொடர்ந்து அவருடன் 5 சீசன்களில் நடிக்க முடியாது. திறமைசாளிகளை முன்னேற விடாமல் தடுத்துவிடுவார். நடிகர் சிங்கமுத்து தான் எனக்கு திருமணம் செய்து பல வகையில் உதவி செய்தவர். இன்னும் என்னை அவர்தான் கவனித்து வருகிறார். ஒருமுறை பாண்டிச்சேரியில் வடிவேலு சிங்கமுத்து இருவரும் சேரவது குறித்து கேட்டார்கள். நான் இருவரும் சேர்ந்தால் நன்றாக இருக்கும என்று சொன்னேன்.

அது பேப்பரில் ஹெட்லைனாக வந்தது. இதை பார்த்த வடிவேலு நள்ளிரவு 2 மணிக்கு போன் செய்து கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு ஆபீஸ் பக்கம் வராதே என்று சொல்லிவிட்டார். ஆனாலும் மறுநாள் அவரின் ஆபீஸ்க்கு சென்றேன். கண்டபடி பேசினார். அவர் காலை பிடித்து கெஞ்சி மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவர் என் நெஞ்சில் மிதித்து வெளியே போ என்று சொல்லிவிட்டார். அதோடு சரி அதன்பிறகு இன்னமும் அந்த ஆபீஸ் பக்கம் நான் போகவில்லை. திறமைசாளிகள் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் வடிவேலு தெளிவாக இருப்பார் என வடிவேலுவின் யாரும் அறியாத குணத்தை பற்றி வேதனையுடன் போண்டா மணி பேசியுள்ளார்.