சூர்யா குடும்பத்தில் ஒருவராக இருந்தவர்… உண்மையை சொன்னதற்காக மொத்த குடும்பமும் வெளியே அனுப்பிய சோகம்..

0
Follow on Google News

நடிகர் சூர்யா ஆரம்பத்தில் சினிமாவிற்கும் இவருக்கும் இடையே இடைவெளி அதிகம். அந்தளவுக்கு சினிமாவில் விருப்பம் இல்லாதவராகத்தான் இருந்திருக்கிறார். அதன் பிறகு நேருக்கு நேர் என்றப் படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் சூர்யா. அப்போது கூட இவருக்கு நடிக்கவே தெரியவில்லை, நடனமும் ஆட வரவில்லை என்று பல விமர்சனங்கள் எழுந்தது.

தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். அதிலும் தேசிய விருது நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அதற்கு முக்கிய காரணம் அவரது அயராது முயற்சியும் கடின உழைப்புமே காரணமாக இருந்தாலும் சூர்யாவின் வளர்ச்சிக்கு அவருடைய மேனேஜராக ஆரம்ப காலகட்டத்தில் இருந்து வரும் தங்க துரையும் தான்.

இந்நிலையில் சமீபகாலமாக நடந்த அமீர், ஞானவேல் ராஜா பிரச்சினை காரணமாக சிவக்குமாரையும் சேர்த்து ஒட்டுமொத்த குடும்பத்தின் பெயரும் சமூக வலைதளங்களில் அடிபட்டது. தொடர்ந்து வணங்கான் பட சர்ச்சை, மும்பையில் வீடு, கங்குவா படப்பிடிப்பு பிரச்சினை என பிரச்சினை மேல் பிரச்சினை என்று சூர்யா வாழ்க்கையே புரண்டு போய் உள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் சூர்யா.

சூர்யாவுக்கு ஒரு வலது கையாக இருந்தவர் அவரது மேலாளரான தங்கதுரை. அவர் கண்ணசைத்தால் மட்டுமே சூர்யா தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வெளிவரும். அந்தளவுக்கு ஒரு பாசப்பிணைப்பாக இருந்தவர்தான் தங்கதுரை. தங்கதுரை முதன் முதலில் ஜோதிகா தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான போது அவருக்கு மேனேஜராக பணியாற்றினார். அவர் மூலமாக சூர்யாவின் நட்பு கிடைத்து பின்னர் அவரின் மேனேஜராக தொடர்ந்தார்.

அதன் பின்னர் பல ஆண்டுகாலமாக சூர்யா, கார்த்தி, ஜோதிகா, ஷங்கர், அதிதி ஷங்கர், காஜல் அகர்வால் என பல முன்னணி நட்சத்திரங்களுக்கு மேனேஜராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இப்போது சூர்யா குடும்பத்தைச் சேர்ந்த சூர்யா, ஜோதிகா மற்றும் கார்த்தி ஆகிய மூவரும் அவரை தங்கள் மேனேஜர் பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளனராம். சூர்யா குடும்பத்தினரின் இந்த முடிவு தமிழ் திரையுலக வட்டாரத்தில் பெரிய சலசலப்பை உருவாக்கியுள்ளது.இதனைத் தொடர்ந்து சூர்யாவையும் சூர்யாவின் குடும்பத்தை பற்றியும் தங்கதுரை கோலிவுட் வட்டாரத்தில் தவறாக பேசி வருகிறாராம்.

இவர் சூர்யாவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்ததால் இவர் சொல்வதை எல்லோரும் ஈஸியாக நம்பவும் செய்கிறார்களாம். தங்கதுரை இப்படி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாமல் சூர்யா மனம் உடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யா நடித்த சூரறைப் போற்று திரைப்படத்திற்கு, சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளி, சிறந்த திரைக்கதைக்காக சுதா கொங்கரா, சிறந்த பின்னணி இசைக்காக ஜிவி பிரகாஷ் என மொத்தம் 5 தேசிய விருதுகள் கிடைத்தது.

இதற்கு காரணம் சூர்யாவுக்கு மேலாளர் தங்கதுரை தான் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது சூர்யாவின் மேலாளர் தங்கதுரை தேசிய விருது தேர்வுக்குழுவில் இருந்தார்.அவரது பரிந்துரையின்பேரில்தான் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினார் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பருத்திவீரன் பஞ்சாயத்து தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தனக்கு நெருக்கமானவர்களிடம் சூர்யா குடுமபத்தினர் அமீருக்கு மிக பெரிய அநீதியை இழைத்து விட்டார்கள் என்றும், அமீர் பக்கம் தான் நியாயம் உள்ளது என்பது போல் பேசி வந்தது சூர்யா குடும்பத்தினர் கவனத்துக்கு சென்றதை தொடர்ந்து தான் தங்கள் குடும்பத்தில் ஒருவர் போன்று இருந்த தங்கதுரையை சூர்யா சிவகுமார் குடுமபத்தினர் ஓன்று சேர்ந்து விரட்டியதாக கூறப்படுகிறது.