துண்ட காணோம் துணிய காணோம்னு சூர்யா ஓடணும்… வடிவாசலில் இருந்து சூர்யாவை விரட்டியடிக்க முடிவு..

0
Follow on Google News

இயக்குனர் அமீர் மற்றும் நடிகர் சூர்யா குடும்பத்தினருக்கும் இடையில் நடக்கும் பருத்தி வீரன் படத்தின் பஞ்சாயத்து உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. பருத்தி வீரன் பஞ்சாயத்தில் ஞானவேல் ராஜா மற்றும் அமீர் இருவருக்கும் இடையில் தான் பிரச்சனை என்று கூறப்பட்டாலும், ஞானவேல் ராஜா பின்னால் இருந்து செயல்படுவது சூர்யா குடும்பத்தினர் தான் என்கிற பேச்சு சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது.

இதனால் இந்த விவகாரம் அமீர் மற்றும் சிவகுமார் குடும்பத்தினருக்கு இடையிலான பிரச்ச்னையாகவே பார்க்கப்பட்டுகிறது. இந்நிலையில் வெற்றிமாறன் இயக்ககத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா – அமீர் இருவரும் கமிட்டாகியுள்ளனர், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில், தற்பொழுது உள்ள சுழலில் சூர்யா – அமீர் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

ஏற்கனவே வாடிவாசல் படத்தில் அமீர் நடிக்க இருப்பதற்கு சூர்யா ஆரம்ப கட்டத்தில் அதிருப்தி தெரிவித்ததாகவும், அமீருக்கு பதில் வேறு ஒரு நடிகரை சூர்யா மாற்ற சொல்லி வலியுறுத்திய போது, அதற்கு வெற்றிமாறன் அதெல்லாம் முடியவே முடியாது. வாடிவாசல் படத்தில் அமீர் நடிக்க இருக்கும் கதாபாத்திரத்தை நான் அமீரை மனதில் வைத்தே தான் எழுதினேன் என்று கரராக ஆரம்பத்திலேயே அமீரை வாடிவாசல் படத்திலிருந்து மாற்றவே முடியாது என்று தெரிவித்திருக்கிறார் வெற்றி மாறன்.

இந்த நிலையில் மீண்டும் தற்பொழுது அமீரின் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மோகன்லாலை நடிக்க வைக்குமாறு சூர்யா இயக்குனர் வெற்றிமாறனிடம் கேட்டதாகவும், அதற்கு வெற்றிமாறன், வடிவாசலில் இருந்து அமீரை மாற்ற முடியாது உங்களுக்கு இஷ்டம் இருந்தால் நடிக்கலாம், இல்லையெனில் தாராளமாக நீங்கள் விலகிக் கொள்ளலாம்” இன்று சூர்யாவின் முகத்தில் அடித்த மாதிரி பட்டென்று கூறி விட்டாராம்.

இந்நிலையில் சூர்யா குடும்பத்தினருக்கும் அமீருக்கும் இடையில் நடக்கும் பிரச்சனைக்கு அமீர் பக்கம் வெற்றிமாறன் உறுதியாக இருப்பதால் சூர்யாவுக்காக அமீரின் நட்பை இழக்க வெற்றிமாறன் தயாராக இல்லை, அதே வேலையில் அமீரின் நட்புக்காக சூர்யாவை இழக்க தயாராக இருக்கிறார் வெற்றிமாறன் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

மேலும் வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளர் தாணுவிற்கும் சிவக்குமார் குடும்ப உறவினர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையில் ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்த நிலையில், தற்போது ஞானவேல் ராஜாவிற்கும் அமீருக்கும் நடக்கும் பிரச்சனையில் நிச்சயம் தயாரிப்பாளர் தானுவும் அமீர் பக்கமே நிற்பார். இந்த சூழலில் தான், சூர்யாவிற்கு ஆங்கில படம் ஒன்று நடிக்க கமிட்டாகி உள்ளார்.

அந்த ஆங்கில படத்தில் நடிக்க தயாரிப்பு நிறுவனம் சூர்யாவிற்கு கண்டிஷன் ஒன்று போட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது சூர்யா அந்த ஆங்கில படத்தில் நடித்தால், வேறு எந்த படத்திற்கும் தேதி கொடுக்கக் கூடாது என்றும், படத்தை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டு தான் அடுத்த படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்று கராராக சொல்லி இருக்கிறதாம்.

இதனால் சூர்யா, உடனடியாக வெற்றிமாறனை அழைத்து வாடிவாசல் படத்தை விரைவில் எடுங்க நான் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறேன் என அழுத்தம் கொடுத்துள்ளார், ஆனால் அமீர் விடுதலை பார்ட் 2 படத்தை எடுத்து முடித்துவிட்டு மார்ச் மாதம் நீங்களும் அமீர் நடிக்கும் காட்சிகளை படமாக்கலாம் என்று தெரிவிக்க, கடும் அப்செட்டில் இருக்கிறாராம் சூர்யா, ஏற்கனேவே அமீருடன் தனக்கு பிரட்சனை என தெரிந்து கொண்டு ஆரம்பத்திலே அவருடனான கட்சியை படமாக்குவதா என்று. மேலும் சூர்யாவை எப்படி வணங்கான் படத்தில் இருந்து பாலா ஓடவிட்டாரோ, அதே மாதிரி சூர்யாவே வடிவசால் படத்தில் இருந்து ஓடலாம் என்று கூறப்படுகிறது.