சீக்கிரம் வடிவாசலை எடுங்க… நான் ரெம்ப பிசி… வெற்றிமாறனுக்கு சூர்யா நெருக்கடி…

0
Follow on Google News

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் போன்ற படங்கள் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த நிலையில், அடுத்தடுத்து நிறைய படங்களில் வரிசையாக பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக சூர்யாவின் சூரரை போற்று படம் 78வது கோல்டன் குளோப்பில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் பிரிவில் திரையிடப்பட்ட பத்து இந்திய படங்களில் ஒன்றாக இது தேர்ந்தெடுக்கப்பட்டது.

இப்படி சர்வதேச அளவில் பிரபலமான சூர்யாவிற்கு இப்போது ஆங்கில படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அதனால் சூர்யா இயக்குனர் வெற்றிமாறனுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நடிகர் சூர்யா நேருக்கு நேர் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர், நந்தா, பிதாமகன், காக்க காக்க, பேரழகன், ஏழாம் அறிவு, சிங்கம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வளர்ச்சி அடைந்தார்.
இவர் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா அவர்கள் இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இந்த படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் நடிகர் சூர்யா இப்படத்தை முடித்துக் கொடுத்ததும், அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் “சூர்யா 43” நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படி நடிகர் சூர்யா கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார். இருப்பினும், நடிகர் சூர்யாவை வைத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் வாடிவாசல் திரைப்படம் எப்போது தொடங்கப்படும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

வெற்றிமாறன்-சூர்யா கூட்டணியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும், வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இந்த சூழலில் தான், சூர்யாவிற்கு ஆங்கில படம் ஒன்று நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமில்லாமல் ஆங்கில படத்தில் நடிக்க தயாரிப்பு நிறுவனம் சூர்யாவிற்கு கண்டிஷன் ஒன்று போட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அதாவது சூர்யா அந்த ஆங்கில படத்தில் நடித்தால், வேறு எந்த படத்திற்கும் தேதி கொடுக்கக் கூடாது என்றும், படத்தை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டு தான் அடுத்த படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்று கராராக சொல்லி இருக்கிறதாம். இதனால் சூர்யா, உடனடியாக வெற்றிமாறனை அழைத்து வாடிவாசல் படத்தை விரைவில் எடுத்து முடிக்குமாறு கூறியிருக்கிறார்.

ஆனால் இயக்குனர் வெற்றிமாறன், தற்போது விடுதலை 2 படத்தில் பிசியாக பணியாற்றி வருவதால், சூர்யா சொன்ன காலத்திற்குள் வாடிவாசல் படத்தை எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார். இருந்தாலும் வெற்றிமாறன் அடுத்த ஆண்டு 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவோம் அதன் பிறகு பார்த்துக் கொள்வோம் என்பது போல சூர்யாவிடம் கூறியிருக்கிறாராம். மேலும் அந்த பத்து நாட்களும் முழுக்க முழுக்க நீர் மட்டும் சூர்யா காட்சியை தான் படமாக திட்டமிட்டு இருக்கிறாராம்.

சூர்யா வாடிவாசல் படத்தை எடுக்கச் சொல்லி அவசரப்படுத்தியும் அதை காதல் போட்டுக் கொள்ளாத வெற்றிமாறன், சரியாக ஒரு தேதி சொல்லாமல் குழப்பி வருவதால், சூர்யா வெற்றிமாறன் பதிலுக்கு காத்திருப்பதாக கூறப்படுகிறது. வெற்றிமாறன் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை உறுதிப்படுத்தவில்லை என்றால், சூர்யா நிச்சயமாக ஆங்கில படத்திற்கு ஓகே சொல்லிவிட்டு அடுத்தடுத்த வேலைகளை பார்ப்பார் என்று தெரிகிறது.