மனைவி பேச்சை கேட்டு பலத்த அடி வாங்கும் சூர்யா… தந்தை வயித்தெரிச்சல் சும்மாவா..

0
Follow on Google News

நடிகர் சூர்யா – ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள், இவர்கள் காதலை ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்து வந்த சூர்யா தந்தை சிவகுமார், ஒரு கட்டத்தில் சூர்யா அவருடைய காதலில் உறுதியாக இருந்து வந்ததால் பல கண்டிஷன்களுடன் சூர்யா – ஜோதிகா காதலை ஏற்று கொண்டு திருமணம் செய்து வைத்தார், திருமணத்திற்கு பின்பும் கூட சென்னையில் கூட்டு குடும்பமாகவே வாழ்ந்து வந்தனர்.

சிவகுமார் வீட்டில் ஒரு பெரிய டைனிங் டேபிள் உள்ளது, இந்த டைனிங் டேபிளில் தான் ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள், அந்த நேரத்தில் தான் பல விஷயங்களை அவர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் ஜோதிகாவுக்கு இந்த கூட்டு குடும்ப வாழ்கை பிடிக்காததால், தன்னுடைய சொந்த ஊரான மும்பையில் கணவருடன் குடியேற வேண்டும் என்கிற நீண்ட நாள் ஆசை நிறைவேறும் வகையில் மும்பையில் கணவர் குழந்தைகளுடன் புதிய வீடு ஓன்று வாங்கி அங்கே தற்பொழுது வசித்து வருகிறார் ஜோதிகா.

சூர்யா படப்பிடிப்புக்கு மும்பையில் இருந்து தான் வந்து செல்கிறார். இந்த நிலையில் கடந்த 2014 தொடங்கி தொடர்ந்து 8 தோல்வி படங்களை கொடுத்து வந்த சூர்யாவுக்கு, கடந்த 2020ம் ஆண்டு வெளியான சூரரை போற்று படம் மிக பெரிய வெற்றியை கொடுத்து, நீண்ட இடைவெளிக்கு பின்பு சூர்யாவுக்கு கிடைத்த வெற்றி சினிமாவில் புத்துணர்ச்சியை கொடுத்து, அடுத்து அவர் நடிப்பில் வெளியான ஜெய்பீம் அடுத்த ஒரு வெற்றியை கொடுத்தது.

இதனை தொடர்ந்து ஒரே நேரத்தில் பலா இயக்கத்தில் வணங்கான், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம், சூரரை போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா என அடுத்தடுத்து மிக பெரிய இயக்குனர்கள் படத்தில் கமிட்டாகி இருந்தார் சூர்யா. இதில் வணங்கான் படத்தின் பாதி படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், அந்த படத்தின் இயக்குனர் பாலா – சூர்யா இடையில் நடந்த மோதல் காரணமாக படம் பாதியிலே கைவிடப்பட்டது.

தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் நடிக்க இருந்த நிலையில், தற்பொழுது வெற்றிமாறன் வடிவாசலை ஒரு ஓரமாக வைத்து விட்டு அடுத்தடுத்து வேற படங்களில் கமிட்டாகி வருகிறார், இதனால் வாடிவாசல் படம் தொடங்குவதர்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்கிற உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சுதா கொங்கரா படத்தில் கமிட்டாகி இருந்த சூர்யா, தற்பொழுது சுதா கொங்கராவுக்கு காலில் அடிபட்டு சிகிச்சை எடுத்து வருவதால், இந்த படமும் தொடங்குவதற்கு வாய்ப்பில்லை, இந்த நிலையில் மும்பையில் சூர்யா குடியேறிய பின்பு தான் சினிமாவில் அடி மேல் அடி வாங்கி பல பிரச்சனைகளை சந்தித்து வருவதாக புலம்பி வரும் சூர்யா, சென்டிமெண்டாக சென்னையில் தான் ஏற்கனவே இருந்த வீட்டில் இருந்து வெளியான பின்பு தான் தனக்கு பிரச்சனையாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என பெரும் வருத்தத்தில் இருக்கும் சூர்யா.

ஆரம்பத்திலே தந்தை சிவகுமார் சென்னையில் இருந்து காலி செய்து விட்டு மும்பை செல்ல வேண்டாம் என தெரிவித்தும், மனைவி பேச்சை கேட்டு மும்பையில் குடியேறி தற்பொழுது எதை தொட்டாலும் அது சூர்யாவுக்கு பிரச்சனையாக தான் முடிகிறது, மேலும் தனக்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்புகள் எல்லாம் கை நழுவி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.