நீண்ட வருடங்களுக்கு பின் மனைவி ஜோதிகாவுடன் ஜோடி சேரும் சூர்யா.! வெளியானது அதிரடி அறிவிப்பு..

0
Follow on Google News

1999 ஆம் ஆண்டு பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தின் மூலம் முதல் முதலில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்தார் நடிகர் சூர்யா, அதன் பின் உயிரிலே கலந்து, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜில்லுனு காதல் என தொடர்ந்து நடித்து வந்தனர் இந்த ஜோடி, சூர்யாவுடன் இணைந்து நடித்த முதல் படத்திலே ஜோதிகா காதலில் விழுந்ததாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது, பின் 2003 ஆம் ஆண்டு வெளியான காக்க காக்க படத்துக்கு பின் இவர்களின் காதல் கிசு கிசு முக்கியதுவம் பெற்றது.

ஆனால் திரை மறைவில் காதலித்து வந்த இந்த ஜோடி அதிகாரப்பூர்வமாக இவர்கள் காதல் பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை, இந்நிலையில் ஒருகட்டத்தில் காக்க படத்துக்கு பின் நடிகர் சூர்யா முன்னனி நடிகர் வரிசையில் இடம் பிடித்ததும், அவரே தனது படத்தில் நடிகை ஜோதிகாவை கதாநாயகியாக நடிக்க வைக்க இயக்குனரிடம் சிபாரிசு செய்து, படப்பிடிப்பு தளம், வெளிநாடு படப்பிடிப்பு என இருவரும் தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

அப்படி இந்த ஜோடி தங்கள் காதலை வளர்ந்துகொண்டே நடித்த படம் தான் அடுத்தடுத்து வந்த பேரழகன், மாயாவி, ஜில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்கள், இந்நிலையில் ஒரு கட்டத்தில் இந்த ஜோடியின் காதலுக்கு சூர்யாவின் தந்தை சிவகுமார் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, சூர்யாவின் பிடிவாதத்தால் ஒருவழியாக திருமணத்துக்கு ஒப்பு கொண்டார் சிவகுமார், இதனை தொடர்ந்து சூர்யா ஜோதிகா திருமணம் 2006 ஆம் ஆண்டு மிக விமர்சரியாக நடைபெற்றது.

திருமணத்துக்கு பின் சினிமாவுக்கு முழுக்கு போட்ட ஜோதிகா குடும்பத்தில் கவனம் செலுத்த தொடங்கினர், அதன் பின் இரண்டு குழந்தைக்கு தாயான ஜோதிகா மீண்டும் 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் ரி-என்ட்ரி கொடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், இந்நிலையில் தொடர்ந்து கடந்த எட்டு வருடங்களாக தொடர் தோல்வி படங்களை கொடுத்து வரும் சூர்யா அடுத்ததாக தனது மனைவியுடன் இணைந்து நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார், இந்த படத்திற்கான கதையை இயக்குனர் கலித்தா சமீம் உருவாக்கி வருவதாக நடிகர் சூர்யா பேசியுள்ளது சினிமா ரசிகர்கள் மத்தியில் சூர்யா-ஜோதிகா நடிக்கும் புதிய படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.