என்ன ஒரு பித்தலாட்டம்..! சூர்யாவின் போலி முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட H.ராஜா..!உச்சக்கட்ட அவமானத்தில் நடிகர் சூர்யா..

0
Follow on Google News

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகியுள்ளது, இந்த படத்தில் அமைந்துள்ள ஒரு காட்சி பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது, அதில் நடிகர் பிரகாஷ் ராஜு உடன் ஹிந்தியில் பேசிய நபரை கண்ணத்தில் பளார் என பிரகாஷ் ராஜ் அறைகிறார், அதற்கு எதுக்கு சார் என்னை அடித்தீர்கள் என அடிவாங்கியவர் கேட்க அதற்கு பிரகாஷ் ராஜ் தமிழில் பேசு என பதிலளிக்கிறார்.

இதே போன்று தெலுங்கில் வெளியாகி உள்ள ஜெய் பீம் படத்தில், இதே காட்சியில் எதுக்கு என்னை அடித்தீர்கள் என ஹிந்தியில் பேசிய அந்த நபர் கேட்க அதற்கு பிரகாஷ் ராஜ் தெலுங்கில் பேசு என பதிலளிக்கிறார், ஆனால் ஹிந்தியில் வெளியான ஜெய் பீம் படத்தில் இடப்பெற்ற அதே கட்சியில் இந்தியில் பேசிய நபர் ஏன் சார் என்னை அடித்தீர்கள் என கேட்க, அதற்கு உண்மையை பேசு என பிரகாஷ் ராஜ் பதிலளிக்கிறார்.

இது என்ன ஒரு மனக்கேட்ட பொழப்பு என்று அந்த படத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், மற்றும் நடிகர் சூர்யா ஆகியோரை மக்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருத்து எடுத்து வருகின்றனர், இந்நிலையில் கடந்த காலங்களில் மும்மொழி கொள்கை குறித்து கருத்து தெரிவித்து வந்த நடிகர் சூர்யா, ஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளைத் திணிக்கக் கூடாது. மாணவர்களால் அதை படிக்க முடியாது என தெரிவித்திருந்த சூர்யா,

மேலும் , பாரம்பரியமான பல்வேறு மொழிகளைக் கொண்ட இந்தியாவில், குழந்தைகளின் பயிற்று மொழி பற்றி தெளிவை முன்வைக்காமல், கூடுதல் மொழிகளைக் கற்பிக்க முனைவது குழந்தைகளின் கல்விச் சுமையை மேலும் அதிகரிக்கும். பன்மொழிகள் பேசும் இந்தியா போன்ற நாட்டிற்கு மும்மொழிக் கொள்கையை விட இருமொழிக் கொள்கையை சிறந்ததாக இருக்கும் என்பதை கல்வியாளர்கள் நிறுவி இருக்கின்றனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது என சூர்யா தெரிவித்திருந்தார்.

ஆனால் மும்மொழி கொள்கையை கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்த நடிகர் சூர்யா, தற்போது அனைத்து மொழிகளிலும், குறிப்பாக இந்தி மொழியிலும் தனது நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தை வெளியிட்டுள்ளது குறித்து பாஜக மூத்த தலைவர் H.ராஜா தெரிவித்துள்ளதாவது, நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்து கொள்வோம் என H.ராஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மும்மொழி கொள்கையை எதிர்த்து மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த நடிகர் சூர்யா பல மொழிகளில் தனது திரைப்படத்தை வெளியிட்டது குறித்து H.ராஜா தெரிவித்துள்ள கருத்து நடிகர் சூர்யாவின் போலி முகத்திரையை ஒரு பக்கம் கிழிந்தாலும், மறுபக்கம் ஜெய் பீம் படத்தில் அமைத்துள்ள பிரகாஷ் ராஜ் நடித்த காட்சிகள் ஹிந்தியில் , தமிழில் வேறு வேறாக வசனம் அமைத்துள்ளது குறித்து மக்கள் எழுப்பி வரும் கேள்விகள் நடிகர் சூர்யாவுக்கு உச்சகட்ட அவமானத்தை ஏறப்டுத்தியுள்ளது என கூறபடுகிறது.

சூர்யா, விஜய் சேதுபதி, திராவிட குஞ்சு சித்தார்த்… தம்பிகளா எங்கடா போனீங்க.?