தேசிய விருதை தொடர்ந்த பிலிம் பேர் அவார்டிலும் சூர்யாவின் பித்தலாட்டம் அம்பலம்… என்ன பொழப்பு இது.?

0
Follow on Google News

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான சூழரைப் போற்று படத்திற்காக சுமார் ஐந்து தேசிய விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டு, சமீபத்தில் சூர்யா மற்றும் அந்த படத்தில் பணியாற்றி விருது அறிவிக்கப்பட்டவர்கள் பெற்றுக் கொண்டார்கள். சூர்யாவின் சூரரை போற்றும் படத்திற்கு 5 விருதுகள் கிடைப்பதற்கு பின்னணியில் அவருடைய மேனேஜர் தங்கதுரை இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேசிய விருது தேர்வுக்கு குழுவில் தங்கதுரை இடம் பெற்று இருந்தது தான் சூர்யாவின் சூரரை போற்று படத்திற்கு 5 தேசிய விருது கிடைக்க காரணம் என்கின்ற ஒரு பெரும் சர்ச்சை கிளம்பியது. இந்த நிலையில் சூர்யா அவருடைய மேனேஜர் தங்கதுரை மூலம் தில்லாலங்கடி வேலை செய்துதான் இத்தனை தேசிய விருதுகளை தன்னுடைய படத்திற்கு பெற்றுள்ளார் என்கின்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஃபிலிம் பேர் விருதில் 2021 சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்திற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டது. ஆனால், 2021 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில் 2020 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று படத்திற்கு ஏழு விருதுகள் கிடைப்பதற்கு பின்னணியில் அவருடைய மேனேஜர் தங்கதுரை தான் காரணம் என்று கூறப்படுகிறது.

பிலிம் பேர் விருது வழங்கும் குழுவில் இருந்து தங்கதுரை ஓய்வு பெற்றிருந்தாலும், அவருடைய ஆதிக்கம் தற்பொழுது வரை ஃபிலிம் பேர் விருது வழங்கும் குழுவில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தான் சூர்யாவின் சூரரை போற்று படத்திற்கு 7 ஃபிலிம் விருது கிடைத்துள்ளதுஎன்று கூறப்படுகிறது. தில்லாலங்கடி செய்து சூர்யா தேசிய விருது வாங்கியது போன்று, பிலிம் பேர் விருதுகளையும் வாங்கி குவித்து வருவது இதெல்லாம் என்ன பொழப்பு என்கின்ற ஒரு விமர்சனமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.