கெட் லாஸ்ட்….. என் முகத்திலே முழிக்காத…மனைவி லதா மீது உச்சகட்ட கோபத்தில் ரஜினிகாந்த்.! எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

கடந்த ஜனவரி 17ம் தேதி தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிவதாக அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில், தனுஷை விட்டு பிரிவதாக ஐஸ்வர்யா அறிவித்தார்.இதனால் இவர்கள் விரைவில் விவாகரத்து பெற இருப்பதாகவும். மேலும் இரு குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் சம்மதத்துடன் தான் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக செய்திகள் வந்த நிலையில், ஆனால் அதில் உண்மை இல்லை என கூறப்படுகிறது.

தனுஷ் – ஐஸ்வர்யா இடையே ஏற்பட்டு வந்த கருத்து வேறுபாடுகளை தனது தயார் மூலம் தனது தந்தை ரஜினிகாந்துக்கு தெரியப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா. ஆனால், அதற்கு, குடும்பம் என்று இருந்தால் சில பிரச்சனைகள் இருக்க தான் செய்யும் என ரஜினிகாந்த் கூற, அதற்கு இருவரும் பிரிய இருப்பதாக லதா தெரிவிக்க அதற்கு பசங்க பெருசா வளர்ந்துட்டாங்க. இப்ப எதுக்கு இந்த முடிவு, உனக்கு தெரியாதா.? நீ பேசி சரி செய் என அப்போதே லதா மீது தனது கோபத்தை வெளிப்படுத்தியவர் அடுத்து இது குறித்து பேசாமல் அமைதியாகியுள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்துக்கு எப்போதெல்லாம் அதிகம் கோபம் வருகிறதோ அப்போது ஏதும் பேசாமல் அமைதியான நிலைக்கு சென்று விடுவது அவரின் வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தந்தை விருப்பத்துக்கு எதிராக தனுஷை பிரிவது என முடிவு செய்த ஐஸ்வர்யா. இருவரும் பிரியலாம் முடிவு செய்து இருவரும் பிரிந்துள்ளனர். இந்நிலையில் இந்த தகவல் ரஜினிக்கு தெரியவர குடும்ப உறுப்பினர்கள் மீது உச்சக்கட்ட கோபத்தில் இருந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அமைதியாக இருந்து வந்த ரஜினி தனது குடும்ப உறுப்பினர்கள் யாருடன் பேசாமல் அமைதியாக இருந்து வந்துள்ளார். மனைவி லதா எதாவது பேசலாம் என தன் அருகிலோ, அல்லது வாய் திறக்கலாம் என நினைத்தால் கூட ரஜினிகாந்த் கோபத்துடன் பார்க்கும் அந்த பார்வையிலே ஏதும் பேசாமல் பின் வாங்கி விடுவாராம் லதா. மேலும் தனது மகளின் இந்த பிரச்சனைக்கு முழுக்க காரணம் மனைவி லதா தான் என முடிவு செய்து குறிப்பாக லதா மீது மட்டும் உச்சகட்ட கோபத்தில் ரஜினி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது இளைய மகளிடம் மட்டும் பேசி வரும் ரஜினிகாந்த், அதுவும் ஒரு சில வார்த்தைகள் மட்டும் தான் பேசுகிறாராம். இந்த சூழலில் தனது போயாஸ்கர்ட்டன் வீட்டின் தனியாக அமர்ந்திருந்த ரஜினியின் அருகே சென்று அமர்ந்து பேச முயன்றுள்ளார் அவரது மனைவி லதா, அப்போது கோபத்தின் உச்சிக்கே சென்ற ரஜினிகாந்த் கெட் லாஸ்ட்… என் முகத்திலே முழிக்காதே என சத்தமிட, அங்கே இருந்து நகர்த்துள்ளார் லதா ரஜினிகாந்த்.

இதனை தொடர்ந்து வீட்டில் கடந்த ஒரு வரமாக ரஜினிகாந்த் கடும் கோபத்தில் இருப்பதை ஹைதராபாத்தில் இருக்கும் மகள் ஐஸ்வர்யாவிடம் தெரிவித்துள்ளார் லதா. இதனை தொடர்ந்து அப்பாவை சமாதானம் செய்ய வேண்டுமென்றால் தனுஷ் உடன் மீண்டும் இணைந்து , இருவரும் ஒன்றாக சென்று அப்பாவை நேரில் சந்தித்தால் அப்பாவை சமாதானம் செய்ய முடியும் என உணர்ந்த ஐஸ்வர்யா தற்போது மீண்டும் தனுஷ் உடன் இனைந்து வாழ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.