பலான மேட்டர் நடக்கும் மசாஜ் சென்டர்… திறந்து வைத்து வசமாக சிக்கிய சிவகார்த்திகேயன்… புட்டு புட்டு வைத்த சினிமா பிரபலம்..

0
Follow on Google News

நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன், சினிமா பிரபலங்களின் சொந்த வாழ்க்கையை பற்றி வாய்க்குவந்தவாறு பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். இவரது நக்கலான பேச்சு மற்றும் வதந்திகள் பிரபலங்களை மட்டுமின்றி, ரசிகர்களையும் வெறுப்பேற்றி விடும். யூடியூப் சேனலில்வியூஸ் கிடைப்பதற்காக பல பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கையையும் நேரில் இருந்து பார்த்தது போல நடிகர் நடிகைகள் பற்றி வதந்தியை கிளப்பி விடுகிறார் என்று பலரும் இவரை விமர்சிப்பதுண்டு.

தொடர்ந்து சினிமா பிரபலங்களை பற்றி அவதூறாக பேசி வரும் பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக புகார் கொடுப்போம் என்று ஏற்கனவே சில நடிகைகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இப்படியான நிலையில், பயில்வான் ரங்கநாதன் மீண்டும் இரண்டு நடிகைகளை பற்றி ஏடாகூடமாக பேசி போலீஸ் கேஸ் ஆகும் அளவிற்கு சர்ச்சையில் சிக்கியுள்ளார். “இரண்டு நடிகைகள் என் மீது புகார் கொடுத்துள்ளனர் ” என்று அவரே வீடியோவில் தெரிவித்துள்ளார்.

சினிமா பத்திரிகையாளராக பணிபுரிந்து வரும் பயில்வான் ரங்கநாதன் youtube சேனல்களில் சினிமா பிரபலங்கள் பற்றியும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் எல்லாம் தெரிந்ததை போல கண்டபடி பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில், இரண்டு நடிகைகள் நான் ஆபாசமாக பேசுகிறேன் என்று கூறி காவல் துறையில் புகார் கொடுத்திருக்கின்றனர் என்று புலம்பி இருக்கிறார்.

மேலும், தான் இதுவரை எந்த நடிகைகள் பற்றியும் ஆபாசமாக பேசவில்லை என்றும், நடிகைகள் தான் இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர் என்றும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். முக்கியமாக பிகினி உடைகளை அணிந்து கொண்டு நம் கலாச்சாரத்தை சீரழித்து வருகின்றனர் என்றும், அதைச் சொன்னால் நான் ஆபாசமாக பேசுகிறேன் என போலீசில் புகார் கொடுக்கின்றனர் என்றும் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

சோனியா என்ற நடிகை சென்னையில் மசாஜ் சென்டர் ஒன்று நடத்தி வருகிறார். இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், சமீப காலமாக மசாஜ் சென்டர்களில் ரைடுகள் நடத்தப்பட்டு வருவதாகவும், சோனியாவின் மசாஜ் சென்டரை சிவகார்த்திகேயன் திறந்து வைத்தார் என்றும் கூறியதுடன் சோனியாவின் மசாஜ் சென்டரில் சட்டவிரோதமாக பலான மேட்டர்கள் நடப்பதாக தெரிவித்திருக்கிறார். பயில்வான் ரங்க நாதனின் சர்ச்சை பேச்சை கண்ட நடிகை சோனியா ஆத்திரம் அடைந்து, அவர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஏகப்பட்ட பிரபலங்களை அவதூறாக பேசி வரும் பயில்வான் ரங்க நாதன் மீது, திவ்யா மற்றும் சோனியா என்ற இரு நடிகைகள் புகார் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பின்னால் யாரோ ஒரு பெரிய கை இருக்கிறது என்றும் அந்த தூண்டுதலின் பேரில் தான் என் மீது இருவரும் புகார் அளித்து குண்டர் சட்டத்தில் எல்லாம் போட சொல்கின்றனர். ஆனால், இதற்கெல்லாம் பயப்படக் கூடிய ஆள் நான் கிடையாது என பயில்வான் பேசியுள்ளார்.

இதனிடையே, சோனியாவின் மசாஜ் சென்டர் ஐ திறந்து வைத்தது சிவகார்த்திகேயன் தான் என்று பயில்வான் ரங்கநாதன் கிளப்பிவிட்ட சர்ச்சைக்கு இணையவாசிகள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே ஈமான் மனைவி விவகாரத்தில் சிக்கியுள்ள சிவகார்த்திகேயனை மீண்டும் பயில்வான் ரங்கநாதன் மற்றொரு பிரச்சனையில் சிக்க வைத்துள்ளார் என்ற நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.