ஐஸ்வர்யா உடன் சிவகார்த்திகேயன் நெருக்கம்….அட…கடவுளே…! தனுஷ் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக அறிவித்து ஒரு மதம் முடிவடைந்த நிலையில், இவர்கள் மீண்டும் இணைவதற்கான நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏதும் எட்டப்படாமல், இருவரும் நிரந்தமாக பிரிந்தே வாழ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இருவரும் அடுத்தடுத்து அவர்கள் வேலையில் பிசியாக இருந்து வருகின்றனர். இந்த பரபரப்பான சூழலில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா இடையே இருந்த உறவு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் சொந்த தயாரிப்பில் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவான படம் 3, இந்த படத்தில் நடிகர் தனுஷ் நண்பராக சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், இந்த படத்தில் தனுஷ் தன்னுடன் நடித்த நடிகை ஸ்ருதிஹாசன் உடன் மிக நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளார். அதே நேரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஐஸ்வர்யாவுடம் மிக நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.இது தனுஷுக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை.

இந்நிலையில் மீண்டும் தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்தார். இந்நிலையில் 3 படப்பிடிப்பு முடிந்த பின்பும் கூட அந்த படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா உடனான நெருக்கம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தொடர்ந்துள்ளளது. இந்த நட்பில் இசையமைப்பாளர் அனிருத் இருந்துள்ளார்.
இந்நிலையில் எதிர்நீச்சல் படப்பிடிப்பு முடிந்து வெற்றி பெற்று நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று தந்தது.

இதனை தொடர்ந்து தனது இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளார் ஐஸ்வர்யா, இது நடிகர் தனுஷ்க்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனை அழைத்து தனது மனைவியுடன் இருக்கும் உறவை முறித்து கொள்ள வேண்டும் என தனுஷ் சிவகார்த்திகேயனை கோபத்துடன் பேசியதாக கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர்பாராத சிவகார்த்திகேயன்.

தான் தவறான கண்ணோட்டத்தில் உங்கள் மனைவியுடன் பழகவில்லை என தெரிவித்தவர். தன்னை அவரது மனைவியுடன் ஒப்பிட்டு தவறாக பேசிவிட்டார் தனுஷ் என நினைத்து வேதனையடைந்த சிவகார்த்திகேயன், நான் என்ன அடுத்தவர் மனைவியிடம் தவறாக நடக்கும் அளவுக்கு கேவலமானவனா என வேதனையுடன், தனுஷ் உடனான நட்பையும் சிவகார்த்திகேயன் முறித்து கொண்டதாக கூறப்படும் நிலையில், இதன் பின்பு ஐஸ்வர்யா உடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது இயக்கத்தில் நடிக்க ஐஸ்வர்யா தயார் செய்து வைத்திருந்த கதையில் நடிக்க விருப்பம் இல்லை என்கிற தகவலை நண்பர் அனிருத் மூலமாக சிவகார்த்திகேயன் இயக்குனர் ஐஸ்வர்யாவுக்கு தெரியப்படுத்தியுள்ளார், மேலும் தன்னை தனுஷ் அவர் மனைவியுடன் இணைத்து சந்தேகப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்க இருந்த வை ராஜா வை படத்தை கௌதம் கார்த்தியை வைத்து இயக்கினார் ஐஸ்வர்யா என சினிமா வட்டாரத்தில் கூறப்படுவது குறிப்பிடதக்கது.