ரஜினிகாந்தை புறக்கணித்து கெத்து காட்டும் சிவகார்த்திகேயன்… எதற்காக தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்தே, குடும்பங்கள் கொண்டாடும் கமர்சியல் ஹிட் கொடுத்த படம். இருந்தும் இந்த படத்தை தயாரித்த சன் பிக்ச்சருக்கு எதிர்பார்த்த வசூலை இந்த படம் பெற்று தரவில்லை. இதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய, மீண்டும் சன் பிக்சருக்கு சம்பளத்தை குறைத்துக் கொண்டு கால்ஷீட் கொடுத்தார் ரஜினிகாந்த், இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் தொடர் தோல்வியை சந்தித்து, மிக பெரிய சரிவை சந்தித்து வந்த நிலையில், டாக்டர் படம் மிக பெரிய ஹிட் கொடுத்து ரீ-என்ட்ரி கொடுத்த படம். இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் நெருக்கிய நட்பு இருந்து வருகிறது. அந்த வகையில் ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ள ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் என்ட்ரி கொடுப்பது தொடர்பாக ரஜினிகாந்தை நேரில் சந்தித்த சிவகார்த்திகேயன் புகைப்படம் வெளியாகி வைரலானது. 5 நாள் சிவகார்த்திகேயன் கால் சீட் கொடுத்தால் போதும், சில நிமிடம் மட்டும் ஜெயிலர் படத்தில் என்ட்ரி கொடுக்கும் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம், விக்ரம் படத்தில் சூர்யா கதாபாத்திரம் போன்று மிக பெரிய அளவில் பேசப்படும் அளவுக்கு திட்டமிட்டிருந்தார் இயக்குனர் நெல்சன்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்பொழுது டாக்டர், டான் என தொடர்ந்து மிக பெரிய ஹிட் படம் கொடுத்து தமிழ் சினிமா முன்னனி நடிகர் வரிசையில், ரஜினி, விஜய், அஜித் அடுத்த படியாக நான்காவது இடத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன். ஜெயிலர் படத்தில் நடிக்கும் சிறிய கதாபாத்திரத்தினால், தன்னுடைய சினிமா கேரியரில் பாதிப்பு வந்துவிடும் என்கிற அச்சம் அவருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஜெயிலர் படத்தில் இருந்து நடிகர் சிவகார்த்திகேயன் விலகுவதாக இயக்குனர் நெல்சனிடம் தெரிவித்து. ரஜினிகாந்த் படத்தில் நடிப்பதை புறக்கணித்து விட்டார் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்க இருந்த ஜெயிலர் படத்தின் கதாபாத்திரத்துக்கு வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க அந்த படத்தின் இயக்குனர் நெல்சன் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்க அதிகம் சம்பளம் கேட்டுள்ளார். ஆனால் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து 5 நாள் மட்டுமே கால் சீட் கொடுக்கும் சிவகார்த்திகேயனுக்கு, இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக கொடுக்க முடியாது என மறுத்துவிட்டதால், ஜெயிலர் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் சிவகார்த்திகேயன் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஏமாற்ற பட்ட லெஜெண்ட் சரவணன்…கோமாளியாக்கப்பட்ட பரிதாபம்… எப்படி இருக்கு லெஜெண்ட்..!