ஒன்றாக சுற்றி வரும் சிம்பு-த்ரிஷா.! ஒரே வீட்டில் இருவருக்கும் என்ன வேலை.? சினிமா வட்டாரத்தில் பரபரப்பு.!

0
Follow on Google News

நடிகர் சிலம்பரசனும் நடிகை திரிஷாவும் ஜோடியாக பொது இடங்களில் தென்படுவது பற்றி தமிழ் சினிமா வட்டாரத்தில் பரப்பாக பேசப்பட்டு வருகிறது, சிம்பு வல்லவன் படத்தில் நடித்த போது அந்த படத்தின் நடிகை நயன்தாரா இருவருக்கும் காதல் மலர்ந்தது, இதன் பின் நயன்தாரவுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, ஆனால் மிக குறுகிய காலத்தில் நயன்தாரா-சிம்பு காதல் முறிந்தது.

அதன் பின் பிரபுதேவாவை காதலித்த நயன்தாரா அந்த காதலும் தோல்வியை தழுவ தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட வருடமாக காதலித்து வருகிறார், இந்நிலையில் நயந்தாராவை காதலித்த சிம்புவின் காதல் தோல்விக்கு பின்பு ஹன்சிகாவை காதலித்த சிம்புவின் காதல் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் வரை சென்ற நிலையில், அந்த காதலும் தோல்வியை தழுவியதால் சோகத்தின் உச்சிக்கே சென்றார் சிம்பு.

இந்நிலையில் அலை படத்தில் நடித்த போது நடிகை த்ரிஷா உடன் ஏற்பட்ட நட்பை இன்றுவரை தொடர்ந்து வருகிறார் சிம்பு, அலை படத்தில் நடித்த போது த்ரிஷாவுடன் நெருக்கி பழகிய தகவல் அப்போது சிம்பு காதலித்த பிரபல நடிகர் மகளுக்கு தெரிய வந்ததும், சிம்புவுடனான காதலை முறித்து கொண்டு அவசர அவசரமா அப்போது உச்சத்தில் இருந்த நடிகரை திருமணம் செய்து கொண்டார் அந்த பிரபல நடிகரின் மகள்.

இதனை தொடர்ந்து எத்தனை முறை சிம்பு காதலித்து தோல்வி அடைந்தாலும், திரிஷா உடனான நட்பில் எந்த கருத்து வேறுபாடு இல்லாமல் தொடர்கிறார், ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூட தனக்கு பிடித்த பெண் தோழி திரிஷா என்று சிம்பு கூறியிருப்பார், இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காலத்தில் சிம்பு-திரிஷா இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது,இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கிசு கிசுக்க பட்டது.

ஆனால் சிம்பு-த்ரிஷா திருமணம் குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளிவரவில்லை, ஆனால் திரிஷா- சிம்பு பொது இடங்களில் ஜோடியாக சுற்றி வருவதாகவும், குறிப்பாக இரவு பார்ட்டிகளில் இந்த ஜோடி கலந்து கொன்டு ஆட்டம் போடும் புகைப்படம் அவ்வப்போது வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் சிம்பு-திரிஷா ஜோடி நட்புடன் தொடருமா அல்லது திருமணத்தில் முடியுமா என்று சினிமா வட்டாரத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.