அட்லீ மீது கடும் அதிருப்தியில் ஷாருக்கான்… கோபத்திற்கு என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

பழைய படத்தின் கதைகளை காப்பியடித்து படம் எடுப்பதில் பெயர் பெற்றவர் இயக்குனர் அட்லீ. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ முதல் படமான ராஜா ராணி படம், பல வருடங்களுக்கு முன்பு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான மௌனராகம் படத்தின் கதை என்கிற விமர்சனம் எழுந்தது.

தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான, தெறி, மெர்சல், பிகில் போன்ற அனைத்தும் தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு வெளியான படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்கிற விமர்சனம் உண்டு. முதல் இரண்டு படங்களில் பழைய படத்தின் கதையை மட்டும் காப்பியடித்து வந்த அட்லீ இயக்கத்தில் கடைசியாக வெளியான மெர்சல் மற்றும் பிகில் படத்தில் பல காட்சிகள் ஹாலிவூட் படத்தில் இருந்து காப்பியடித்த சம்பவமும் அரங்கேறியது.

அடுத்த படத்தின் கதை மற்றும் காட்சிகளை காப்பியடித்து மாட்டி கொண்டாலும், சிறிதும் வெட்கப்படாமல் தன்னுடைய படத்தின் கதைக்காகவும், அதில் இடம்பெற்ற கட்சிகளுக்காகவும், பல நாட்கள் இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டது போன்று மேடைகளில் பேசுவார் அட்லீ. தற்பொழுது நடிகர் ஷாருகான் நடிப்பில் இந்தியில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ, இந்த படத்தில் ஷாருகானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்த நிலையில் ஜவான் படத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்ட பட்ஜெட்டை விட அதிக செலவை இழுத்து விட்டுள்ளார் அட்லி. இதனால் ஜவான் படத்தின் தயாரிப்பாளரான ஷாருக்கானுக்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜப்பான் படத்திற்கு செலவு செய்த அளவுக்கு அந்த படம்த்தின் அவுட்புட் ஷாருக்கானுக்கு திருப்தி இல்லை என்றும், இதனால் அட்மின் மீது கடும் கோபத்தில் ஷாருக்கான் இருப்பதாக கூறப்படுகிறது.