ரஜினி மகள் ஐஸ்வர்யா செய்த தவறு… வசமாக மாட்டிக்கொண்டு மிக பெரிய குழப்பத்தில் அஜித்…

0
Follow on Google News

துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் நடித்துவரும் படம் விடாமுயற்சி. நீண்ட கால இழுபறிக்கு பிறகு, தொடங்கப்பட்ட விடாமுயற்சியின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், விடாமுயற்சி படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட பிறகும், பல மாதங்களாக ஷூட்டிங் தொடங்கப் படாமலேயே இருந்தது.

இதனிடையே, நடிகர் அஜித்தும் தனது பைக்கை எடுத்துக் கொண்டு வேர்ல்ட் டூர் சென்ற புகைப்படங்களும் வைரலாகின. ஆனால் அஜித் நடிக்கும் விடாமுயற்ச்சி படம் குறித்து எந்த அப்டேட் இல்லை. நடிகர் அஜித் இப்படி பைக்கில் சுற்றுலா சென்று இருப்பதால்தான் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நடக்கவில்லை என்று பல்வேறு ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகின.

ஒருவழியாக விடாமுயற்சி படத்தின் சூட்டிங் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் ஆரம்பத்தில் சூட்டிங் தொடங்காமல் இழுத்தடிக்கப்பட்டதற்கு காரணம் என்னவென்று இப்போது தெரியவந்துள்ளது. நடிகர் அஜித்தின் விடாமுயற்சி சூட்டிங் தாமதமானதற்கு முக்கிய காரணம் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா என்று சொல்லப்படுகிறது. அதாவது விடாமுயற்சி படம் ஆரம்பிப்பதற்கு முன்பே ரஜினிகாந்த் மகளின் லால் சலாம் படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார்.

லால் சலாம் படத்தையும் லைக்கா நிறுவனம்தான் தயாரித்து வந்தது. இப்படியான சூழலில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்திற்கு லைக்கா நிறுவனம் கணக்கு போட்டதை விட அதிக அளவில் செலவு செய்துள்ளது. இதனால் லைக்கா நிறுவனம் விடா முயற்சி ஷூட்டிங்கை தள்ளி வைத்துக்கொண்டே இருந்துள்ளது.

அதாவது ரஜினியை வைத்து படம் எடுக்கிறேன் என்று பெயரில் மகள் ஐஸ்வர்யா லைக்கா நிறுவனத்திற்கு எக்கச்சக்க செலவுகளை இழுத்து வைத்ததால், அந்நிறுவனத்தால் விடாமுயற்சி படத்தை உடனடியாக தொடங்க முடியாமல் போனது தற்போது வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. ஒருவழியாக லால் சலாம் படத்தை எடுத்து முடித்த லைக்கா நிறுவனம், அதன் பிறகு அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங்கை தொடங்கி வைத்தது.

ஆனால், அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட லால் சலாம் படம் எதிர்பார்த்த வசூலை கொடுக்காமல், பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதால் லைக்கா நிறுவனம் மீண்டும் துவண்டு போய்விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் விடா முயற்சி சூட்டிங் பணிகளை விறுவிறுப்பாக நடத்த முடியவில்லை என்றும் விடாமுயற்சி படத்தின் புரொடக்ஷன் பணிகள் மந்தமாகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது விடாமுயற்சி பட குழுவினருக்கு மட்டுமின்றி அஜித்துக்கும் மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது விடாமுயற்சி படத்தை முடித்ததும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிப்பதாக அஜித் கமிட்டாகி இருந்தார். ஆனால் மீண்டும் விடாமுயற்சி சூட்டிங் இழுத்தடிக்கப்படுவதால் அடுத்த படத்தில் நடிப்பதற்கு தேதி கொடுப்பது பற்றி அஜித் மிகப் பெரிய டென்ஷனில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படம் தயாரிப்பாளருக்கு தற்போது அஜித் மிகப் பெரிய தலைவலியை அனுபவித்து வருகிறார். அந்தவகையில் விடாமுயற்சி படத்திற்கு மட்டுமில்லாமல் அஜித்தின் அடுத்தடுத்து படத்திற்கு தேதி கொடுக்க முடியாத அளவுக்கு லால் சலாம் படம் எடுத்து ஆப்பு வைத்துவிட்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா என்கிறது சினிமா வட்டாரங்கள்.