ரஜினி காந்த் மகள் மாற்று திறனாளியாக இருந்து எப்படி மீண்டு வந்தார்.? பல வருடம் கழித்து வெளியான ரகசியம்..

0
Follow on Google News

சினிமாவில் இமயம் போல் உயர்ந்து நிற்கும் ரஜினிகாந்த், தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களையும் துயரங்களையும் சந்தித்துள்ளார். இருப்பினும், அனைத்தையும் சமாளித்து இந்த வயதிலும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு ரகசியங்கள் இருப்பதாகவும், குறிப்பாக அவரது இரண்டு மகள்களான சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யாவை சிறுவயதில் மிகவும் பொத்தி பொத்தி வளர்த்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதற்கான காரணம் குறித்தும் அன்றைய பத்திரிகைகள் பலவாறு எழுதியுள்ளன. அவற்றைப் பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம். 1981 ஆம் ஆண்டு தன்னை பேட்டி எடுக்க வந்த லதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரஜினிகாந்த். இந்த தம்பதியினருக்கு ஐஸ்வர்யா சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த விஷயம் தான். இவர்களில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதேபோல இரண்டாவது மகளான சௌந்தர்யா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஒரு மகன் பிறந்ததற்கு பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு விசாகம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சௌந்தர்யா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்கள் என்ற பெயர் இருந்தாலும், இருவரது தனிப்பட்ட வாழ்க்கையும் பிரச்சனை நிறைந்ததாகவே இருந்துள்ளது. மகள்கள் இருவரின் வாழ்க்கையும் இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தம் ரஜினிக்கு இருப்பதாகவும் பல்வேறு பத்திரிகைகளில் கூறப்படுகிறது.

கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வரும் ரஜினிகாந்த், ஆரம்ப காலத்தில் தனது இரண்டு மகள்களையும் சிறுவயதில் மீடியாவில் இருந்து ரகசியமாக மறைத்து வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. அதாவது ரஜினிக்கு பிறந்தது ஆண் பிள்ளையா பெண் பிள்ளையா என்று தெரியாத அளவிற்கு மீடியாவில் இருந்து ரகசியமாக வளர்த்து வந்தாராம். இதனால் அன்றைய காலகட்டத்தில் பல பத்திரிகைகளும் ரஜினியின் பிள்ளைகள் பற்றி பல்வேறு கோணத்தில், யூகித்து பலவிதமாக எழுதி வெளியிட்டதாம்.

அன்றைய காலகட்டத்தில் ரஜினியின் மூத்த மகளின் பெயர் மண்டோதரியாக இருக்கலாம் என்று பத்திரிகைகளில் எழுதப்பட்டதாம். அதுமட்டுமில்லாமல் ரஜினிகாந்த் பிறந்த குழந்தை மாற்றுத்திறனாளியாக இருக்கும் போல அதனால்தான் மீடியாவிற்கு காட்டாமல் வைத்திருக்கிறார் என்றும், அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார் என்றும் வதந்திகள் கிளம்பியதாக சொல்லப்படுகிறது.

இவ்வாறு வாய்க்கு வந்தபடி எல்லாம் எழுதினால், ஒரு கட்டத்திற்கு மேல் ரஜினியை தன் ரகசியமாக வளர்த்து வரும் பிள்ளைகள் பற்றி தகவல்களை போட்டு உடைத்து விடுவார் என்ற எண்ணத்தில் மீடியாக்கள் கிசுகிசுக்களை எழுதி வெளியிட்டனவாம். ஆனால் ரஜினி எந்த கிசுகிசுவுக்கும் இசைந்து கொடுக்காமல் வாயை திறக்காமல் இருந்தாராம்.இப்படியே வருடங்கள் பல உருண்டோட, பல ஆண்டுகள் கழித்து ரஜினியின் மூத்த மகள் பெயர் ஐஸ்வர்யா என்பது மீடியாவிற்கு தெரிய வந்தது.

இப்படி பொத்தி பொத்தி வளர்த்த ஐஸ்வர்யாவை மன்மதன் படத்தின் பூஜையில் தான் மீடியாவில் காட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு தனது இரண்டு மகள்களையும் மீடியாவில் இருந்து மறைத்தே வளர்த்து வந்திருக்கிறார் ரஜினிகாந்த். குறிப்பாக அவர்கள் சிறுபிள்ளையாக இருந்த போது அவர்களின் ஒரு புகைப்படம் கூட கசிய விடாமல் பார்த்து இருந்திருக்கிறார் ரஜினிகாந்த்.