இதை வெச்சு தான ஆடுனா… இப்ப விஜய்யின் அதுக்கும் ஆப்பு வெச்ச ரஜினி…

0
Follow on Google News

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற சர்ச்சை கடந்த சில மாதங்களாகவே தமிழ் சினிமாவில் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது, இந்நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் 80 கோடி, ஆனால் விஜய் லியோ படத்தில் சுமார் 130 கோடி சம்பளம் வங்கியுள்ளதாகவும் அடுத்து விஜய் நடிக்க இருக்கும் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் அவர் வாங்க இருக்கும் சம்பளம் 200 கோடி. ஆகையால் சம்பளம் அடிப்படையில் விஜய் தான் நம்பர் ஒன் என்றும், அதனால் அவர் தான் சூப்பர் ஸ்டார் என விஜய்க்கு ஆதரவாக பலரும் கம்பு சுத்தி வந்தனர்.

இந்நிலையில் நடிகர்களின் சம்பளத்தை வைத்து தான் இன்று எந்த நடிகர் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அமோக வசூலை வாரி குவித்ததை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய சம்பளத்தை கிடு கிடுவென அதிகரிக்கும் திட்டத்தில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கம் படத்தில் கமிட் ஆகும்போது அவர் சம்பளத்தை இதுவரை பேசவே இல்லை என கூறப்படுகிறது. அதாவது ஜெயில் படம் வெளியான பின்பு தன்னுடைய சம்பளத்தை பற்றி பேசிக் கொள்ளலாம் என்று லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் கமிட்டாகி இருந்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

ஏற்கனவே நடிகர் விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கம் படத்தில் 200 கோடி ரூபாய் சம்பள பேசப்பட்டுள்ளது. தற்பொழுது சம்பளம் அடிப்படையில் நடிகர் விஜய் நம்பர் ஒன் நடிகராக இருந்து வருகிறார். அந்த வகையில் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் படத்தில் கமிட்டாகி இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் 200 கோடிக்கு மேலே தான் தன்னுடைய சம்பளத்தை நிர்ணயம் செய்வார் என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தர்பார் மற்றும் அண்ணாதே தோல்விகளை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் சுமார் நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கையில் படத்தின் தோல்வியை சுட்டிக்காட்டி அவருடைய சம்பளத்தை குறைத்து 80 கோடி என பேசி ஜெயிலர் படத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கமிட் செய்தது. இந்த நிலையில் தன்னுடைய படம் ஓடவில்லை என தயாரிப்பாளர்கள் சம்பளத்தை குறைத்த போது அதற்கு சம்மதம் தெரிவித்த ரஜினிகாந்த்.

தற்போது தான் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதால் தன்னுடைய சம்பளத்தை அதிகரிப்பதற்கு தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொள்ளும் என்பதிலும் என்ற ஒரு மாற்றமும் இல்லை, அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் கேட்க இருக்கும் சம்பளத்தை கொடுப்பதற்கு நிச்சயம் தயாரிப்பு தரப்பு முன்வரும் என்று கூறப்படுகிறது.

பொதுவாகவே நடிகர் ரஜினிகாந்த் பண விஷயத்தில் ரொம்ப காரராக இருப்பார் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதாவது அவர் யாருக்காவது பணம் கொடுப்பதாக இருந்தால் அதை சரியாக பைசா பாக்கி இல்லாமல் கொடுத்து விடுவார் என்றும், அதே நேரத்தில் தனக்கு வரவேண்டிய பணத்தையும் சரியான முறையில் கேட்டு பெற்று விடுவார் என்றும் அந்த வகையில் தற்பொழுது ஜெயிலர் படம் மிகப்பெரியவெற்றியை பெற்று வசூலை வாரி குவித்துள்ளதால்,

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தில் சுமார் 200 கோடிக்கு மேல் அதாவது 225 அல்லது 250 கோடி என ரஜினி சம்பளத்தில் காரராக கேட்டு பெற்றுவிடுவார் என்று கூறப்படுகிறது அந்த வகையில் இதுவரை சம்பளத்தின் அடிப்படையிலும் வசூலின் அடிப்படையிலும் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என கம்பு சுத்தி வந்த வந்தவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் ரஜினியின் ஜெயிலர் படம் வெற்றியும் அடுத்த அவர் நடிக்க இருக்கும் படத்தில் வாங்க இருக்கும் சம்பளமும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.