ரஜினிக்கு எதிரியான இரண்டு மகள்கள்… ரஜினியை மண்ணை கவ்வ வைப்பதில் இரன்டு மக்களுக்குள் கடும் போட்டி…

0
Follow on Google News

சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஒய்யாரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்ட ரஜினிகாந்த், குறிப்பாக சினிமா பிரபலங்கள் மேடைகளில் தான் ஒரு ரஜினியின் தீவிர ரசிகன் என்றும், அவரைப் பார்த்து தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது என்று சொல்லும் அளவுக்கு யாரும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த்.

அப்படி சிறுவயதில் இருந்து ரஜினிகாந்தின் படத்தை பார்த்து இன்ஸ்பயர் ஆகி சினிமாவில் இயக்குனர்களாகவும் நடிகர்களாகவும் கட்டம் கட்டி கலக்கிக் கொண்டிருக்கும் பிரபலங்கள் பலர் உள்ளனர்.உதாரணமாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பாபி சிம்ஹா, ராகவா லாரன்ஸ் போன்றோரை சொல்லலாம்.

இவ்வாறு ரஜினியின் ரசிகர்களாக இருந்து எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் ஏராளமான சினிமாவில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும்போது, ரஜினியின் வாரிசுகளான ஐஸ்வர்யா சௌந்தர்யா இருவரும் இதுவரை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எந்த ஒரு படைப்பையும் கொடுக்கவில்லை.மூத்த மகள் ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார்.

அனிருத் இசையமைப்பில் உருவான இந்த படத்தில் உள்ள பாடல்கள் அத்தனையும் பயங்கர ஹிட் அடித்தது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு ரீச் ஆகவில்லை. அதைத்தொடர்ந்து வை ராஜா வை படத்தை எடுத்து மீண்டும் தோல்வியை சந்தித்தார். பின்னர், ஒன்பது வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்த ஐஸ்வர்யா லால் கலாம் படத்தின் மூலம் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.

அதுமட்டுமில்லாமல், அப்பாவை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்தால் படம் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்று கணக்கு போட்டு ரஜினியை மொய்தீன் பாய் கேரக்டரில் நடிக்க வைத்திருந்தார். ஆனால், லால் சலாம் படமும் எதிர்பார்த்த வெற்றியை தராததால் ஐஸ்வர்யாவின் கனவு சுக்குநூறாகி போனது.
ஐஸ்வர்யாவை போலவே ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யாவும் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்று முயற்சித்துள்ளார்.

சௌந்தர்யாவும் தனது கனவை நிறைவேற்றுவதற்கு தனது அப்பாவை பயன்படுத்திக் கொண்டார். ஏகப்பட்ட கோடிகளை செலவழித்து கோச்சடையான் படத்தை எடுத்து ரிலீஸ் செய்தார். ஆனால் படம் படுதோல்வி அடைந்து முதலீடு செய்த பணத்தை கூட எடுக்க முடியாமல் நஷ்டம் அடைந்தது.இப்படி ரஜினியின் மகள்கள் இருவரும் சினிமாவில் தன் திறமையை நிரூபிக்க முடியாமல் திணறிக் கொண்டு இருக்கின்றனர்.அதுமட்டுமின்றி, அப்பாவை வைத்து படம் எடுக்கிறோம் என்ற பேரில் சூப்பர் ஸ்டாரையும் டம்மியாக்கி கொண்டு தான் வருகிறார்கள்.

இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டாரின் இளைய மகள் சௌந்தர்யா, ரஜினி ஹீரோவாக நடிக்கும் படத்தில் வில்லனாக புக் பண்ணி இருப்பது அவருடைய தீவிர சிஷ்யன் ராகவா லாரன்சை தான். ரஜினியுடன் எப்படியாவது ஒரு படம் பண்ணி விட வேண்டும் என்று நினைத்த ராகவா லாரன்ஸ் அவருக்கு வில்லனாக வேண்டும் என்று எப்போதுமே நினைத்தது கிடையாது.

இருப்பினும் தலைவரின் மகள் ஆசையை கெடுத்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் அரைகுறை மனதோடு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம். நீண்ட காலமாக பேய்களை வைத்து சினிமாவில் காலத்தை தள்ளி வந்த ராகவா லாரன்ஸுக்கு இப்போதுதான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அப்படியான நிலையில் ரஜினியை மண்ணை கவ்வ வைத்து வரும் ரஜினி மகள்கள் தற்பொழுது லாரன்ஸை மண்ணை கவ்வ வைக்க போகிறார்கள் என்றும், அதே நேரத்தில் வடிவேலு நகைசுவை காட்சிகளில் வருவது போன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இரண்டு மக்களுக்கும் படம் எடுக்கிறேன் என்கிற பெயரில் காமெடி கீமடி ஒன்னும் செயலயே என்பது போன்று உள்ளது ரஜினியின் நிலைமை.