என் கணவரை விட்டுட்டு…சௌந்தர்யா – ஐஸ்வர்யா கடும் சண்டை…

0
Follow on Google News

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதேபோல், ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் சினிமாவில் அனிமேஷன் காட்சிகள் வடிவமைப்பது, இயக்குனராக திகழ்கிறார். இவர் தன் தந்தையை வைத்து கோச்சடையான் என்ற படத்தை எடுத்து இருந்தார். இப்படி ரஜினியின் வாரிசுகளான ஐஸ்வர்யாவும் சௌந்தர்யாவும் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் அவர்களால் சினிமாவில் ரஜினி அளவுக்கு கொடிகட்டி பறக்க முடியவில்லை.

சரி மகள்கள் இருவருக்கும் சினிமாதான் சரிப்பட்டு வரவில்லை என்று பார்த்தால் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இரண்டு மகள்களும் நிறைய பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறார்கள். இதனால் ரஜினியும் நிம்மதி இழந்து தவித்து வருகிறார். அதாவது, மூத்த மகள் ஐஸ்வர்யா கணவர் தனுஷை பிரிந்த பிறகு லால் சலாம் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்த ஐஸ்வர்யாவுக்கு அந்தப் படம் சரியாக கை கொடுக்கவில்லை.

அதேபோல் இளைய மகளான சௌந்தர்யா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கோச்சடையான்’ , தனுஷ் நடித்த ’வேலையில்லா பட்டதாரி 2’ போன்ற படங்களை இயக்கினார். சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமான அளவில் திருமணம் நடந்தது. ஆனால் சௌந்தர்யாவுக்கும், அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது.

இதன் காரணமாக சௌந்தர்யா விவாகரத்து வாங்கி முழு கவனத்தையும் திரைப்படங்கள் இயக்குவதும், அனிமேஷன் காட்சிகள் வடிவமைப்பதும் போன்ற வேலைகளில் தீவிரம் செலுத்தி வந்திருந்தார். இந்த சமயத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த்,தொழிலதிபர் வணங்காமுடி மகன் விசாகன் ஆகிய இருவரும் காதலித்து வந்தார்கள். பின் மறுமணம் செய்து கொண்டார்.

இப்படியான சூழலில், ரஜினியின் நிம்மதியை கெடுக்கும் வகையில் இரண்டு மகள்களும் மீண்டும் புது பிரச்சனையை ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது சௌந்தர்யாவின் கணவர் விசாகன் தொழிலதிபராக இருந்தாலும் அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வெகு நாட்களாகவே இருந்து வருகிறது. இதனால் நிறைய இயக்குநாடுகளிடம் சினிமாவில் வாய்ப்பு கேட்டு முயற்சி செய்து வந்திருக்கிறார்.

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இதெல்லாம் உங்களுக்கு ஒத்து வராது குடும்பத்தில் நான் மட்டும் நடித்தால் போதும் என்று சொல்லி மாப்பிள்ளையின் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். ஆனால் இந்த விஷயத்தை தெரிந்து கொண்டு ஐஸ்வர்யா, தங்கையின் கணவரிடம் சென்று உங்களை வைத்து நான் படம் எடுக்கிறேன் நீங்கள் சினிமாவில் பிரபலமாகலாம் என்று கூறி, விசாகனின் ஆசையை தூண்டி விட்டிருக்கிறார்.

ஆனால் சௌந்தர்யாவுக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. எனவே, “நீ உன் வேலைய மட்டும் பாரு என் கணவரை வைத்து நீ கல்லா கட்ட பாக்குறியா? என் கணவரின் ஆசை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பது எனக்கு தெரியும் என் குடும்பத்துக்குள் புகுந்து உன்னுடைய இயக்குனர் புத்தியை காட்ட வேண்டாம்” என்ற உடன் பிறந்த அக்கா ஐஸ்வர்யாவிடம் கடிந்து கொண்டாராம். ஏற்கனவே நீ அப்பாவை வைத்து எடுத்த படம் திணறிக் கொண்டிருக்கிறது இதுல என் கணவரை வைத்து படம் எடுக்கப் போகிறாயா.என்று கடுமையாக சண்டை போட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இரண்டு மகள்களை அழைத்து பஞ்சாயத்து செய்து இருவரையும் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி இருவரும் சமாதனம் செய்து அனுப்பி வைத்ததாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.