இரண்டுமணி நேரம் ரஜினிகாந்த் உடன் சரக்கு நடித்துள்ளேன்… ரஜினியும் சரக்கு அடித்தார்…

0
Follow on Google News

தமிழ் திரைப்பட நகைச்சுவையாளர்களில் ஒருவராக இருந்தவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இவர், பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு பி.எல். பட்டதாரி மற்றும் தொழில்முறை வழக்கறிஞர். அவற்றோடு ஜோதிடம் பார்ப்பவரும் கூட. இவர், பல திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.

இவ்வளவு ஏன், கமல் ஹாசன் ஹீரோவாக நடித்த மாலை சூட வா படத்திற்கு திரைக்கதை எழுதியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடந்த 1965ம் ஆண்டு வந்த இப்படத்தில் இவருடன் இணைந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், நிர்மலா ஆகியோர் பலரும் அறிமுகமாகியுள்ளனர். இப்படத்தின் மூலம், மூர்த்தி மற்றும் நிர்மலா ஆகியோருக்கு வெண்ணிற ஆடை என்ற அடைமொழி கிடைத்தது.

தனது நடிப்புத் திறமையின் மூலம், தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத காமெடியனாக மாறிய வெண்ணிற ஆடை மூர்த்தி 100க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தன்னுடன் நடித்த மணிமாலாவை காதல் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து நடித்து வந்த வெண்ணிற ஆடை மூர்த்தி தனது முதுமையின் காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சினிமாவுக்கு முழுக்குப் போட்டார்.

இந்நிலையில் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி நடிகர் ரஜினிகாந்த் பற்றி சில ரகசியங்களை சமீபத்தில் பேட்டி ஒன்றில் உடைத்து இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்ப காலகட்டத்தில் எப்படி இருந்தார் என்பது பற்றி வெளிப்படையாக வெண்ணிற ஆடை மூர்த்தி பேசியிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்துக்கு பல வருடங்களாக புகை படித்தல் மற்றும் மது பிடிக்கும் பழக்கம் இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனாலயே நட்சத்திர ஓட்டலில் ரஜினிகாந்த் மது குடிப்பதற்காகவே தனி அறை வைத்திருந்தாராம்.

அதிலும் எப்போதும் தனியாகவே மது அருந்தும் ரஜினி எப்போதாவது சில சமயம் கம்பெனிக்கு மற்ற நடிகர்களுடன் சேர்ந்து மது அருந்துவாராம். ஆனால் பல வருடங்கள் கழித்து அந்த பழக்கத்தை நடிகர் ரஜினி விட்டுவிட்டார்‌ அதைப் பற்றி பல பேட்டிகளில் அவரே சொல்லி இருக்கிறார். அதற்கு காரணம் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது தான். சிறுநீரகம் செயலிழந்து சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்த பிறகு மது அருந்துதல் மற்றும் புகைபிடிக்கும் பழக்கத்தையும் அவர் விட்டுவிட்டார். அது மட்டுமல்லாமல் ரசிகர்களும் குடிப்பழக்கத்தை விட்டு விடுங்கள் என்று பல இடங்களில் அறிவுரை கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினி குறித்து வெண்ணிற ஆடை மூர்த்தி சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் ஒரு படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தேன். அந்த படத்துக்கான படபிடிப்பு மைசூரில் நடந்தது. அப்போ ரஜினிகாந்த் ஒரு முறை என்னிடம் சூட்டிங் முடிந்து என்ன பண்ணுவீங்க என்று கேட்டார். அதற்கு நான் ஒன்னும் பண்ண மாட்டேன் ரூமில் தனியாகத்தான் இருப்பேன். சில நேரங்களில் மது அருந்துவேன் என்று சொன்னேன்.

அதற்கு ரஜினிகாந்த் அப்படியா அப்போ ரெடியா இருங்க கார் அனுப்புறேன் என்று சொன்னார். அவர் சொன்னது போலவே கார் வந்தது… நானும் காரில் ஏறி அவருடைய அறைக்கு போனேன். பிறகு அவருடைய அறையில் நானும் மது அருந்தி கொண்டே இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அந்த அறையில் வேறு யாருமே இல்லை. அப்போ கூட நான் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீங்கள் நடிக்கும் படங்களில் வாய்ப்பு கேட்க மாட்டேன். அதுபோல நீங்கள் நடிக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் அதை நீங்க தடுத்து விடாதீங்க என்று சொன்னேன்.

அதற்கு அவர் சிரித்துவிட்டார். பிறகு என்னிடம் நிறைய விஷயங்கள் பேசினார். அதற்குப் பிறகு என்னை அவர் ஒரு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போயிருந்தார். அங்கு சாப்பாடு எல்லாம் வாங்கி கொடுத்து நான் நல்லா சாப்பிட்டதும் என்னை அறையில் கொண்டு வந்து விட்டு விட்டு போய்விட்டார். அதற்கு பிறகு ரஜினிகாந்துடன் எனக்கு அதிகமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே நேரம் ரஜினிகாந்த் ரொம்பவும் பண்பான மனிதர் என்று வெண்ணிற ஆடை மூர்த்தி அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.