என்னை எதிர்த்து பேசுறியா.. மீனா கன்னத்தில் பளார் விட்ட விஜயா… உச்சக்கட்டதில் சிறகடிக்க ஆசை..

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் கதாநாயகி கதை. முத்து வீட்டில் அவருடைய தாய் எப்போதும் முதல் மற்றும் இளைய மகனுக்கு தான் சப்போர்ட் செய்கிறார். காரணம், முத்து படிக்கவில்லை, அவன் ஓவராக பேசுகிறான், தன்னுடைய தந்தைக்கு ஆதரவாக நிற்கிறான் என்பதால் சிறு வயதில் இருந்தே அவருடைய தாய்க்கு முத்து மீது கோபம் இருக்கிறது.

உண்மையில் முத்து தன்னுடைய தாயின் பாசத்திற்காக ஏங்குகிறார். இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை வியாபாரம் செய்கிறார். ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் அண்ணாமலை கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஒரு வழியாக ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. வீட்டின் இரண்டு மருமகள்களும் பணக்கார பெண்கள் என்பதாலும், வேலைக்கு செல்வதாலும் மீனாவை அதிகமாக வேலை வாங்குகிறார் விஜயா. மீனாவை பார்த்து முத்து, மீனாவிற்கு பூக்கடை போட்டு தருகிறார்.

இதனால் விஜயாவுக்கு கோபம் தாங்க முடியவில்லை. மனோஜ் வேலை இல்லாமல் சுற்றி கொண்டு இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் மீனாவின் தம்பி சத்யா கல்லூரியில் படித்து வேலை செய்வதாக வீட்டில் பொய் சொல்லி சிட்டி உடன் தேவையில்லாத சவகாசம் வைத்துக்கொண்டு இருக்கிறார். இது முத்துவிற்கு தெரிய வருகிறது. ஆனால், சத்யா திமிராக முத்துவிடம் பேசுகிறான். இதனால் சிட்டி- முத்து இடையே ப்ரச்சனை ஏற்படுகிறது. நண்பர்களுக்காக முத்து தன் காரை ஏற்படுகிறது. ஆட்டோ ஓட்டுகிறார்.

இந்த உண்மை வீட்டுக்கு தெரிகிறது. ஆனால், முத்து எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இந்த உண்மையை மீனா அறிந்து கொள்கிறார். ஏற்கனவே மனோஜ் வேலைக்கு போகாத உண்மை குடும்பத்திற்கு தெரிய வந்திருந்தது. அதை தொடர்ந்து ரோகிணி பியூட்டி பார்லரில் விஜயா பெயரை மாற்றி இருப்பது மட்டும்தான் விஜயாவிற்கு தெரிய வந்திருக்கிறது. அதற்கு தையா தக்கா வென்று ரோகிணியை பாடாய் படுத்தி எடுத்துவிட்டார். இனி பியூட்டி பார்லரை ரோகிணி விற்றுவிட்டார் என்று தெரிந்தால் என்ன சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

இப்படி விறுவிறுப்பாக சிறகடிக்க ஆசை சீரியல் சென்று கொண்டிருக்கையில், மறுபக்கம் சிறகடிக்க ஆசை ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் கலாட்டாக்களை மீனா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது பகிர்ந்து வருகின்றார், இந்த நிலையில் முத்துவாக நடிக்கும் வெற்றி வசந்துக்கு பிறந்தநாள் சீரியல் குழுவினர்களால் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது. சில தினங்களாகவே இந்த சீரியலில் ஒவ்வொருவருக்காக பிறந்தநாள் கொண்டாட்டம் கொண்டாடப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்புதான் இந்த சீரியலில் சத்யாவாக மீனாவின் தம்பி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

அதற்குப் பிறகு மனோஜின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இப்போ முத்துவின் பிறந்தநாளும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். சீரியல் ஒரு பக்கமாக விறுவிறுப்பான கதையோடு டிஆர்பியில் முதலிடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் இவர்கள் பிறந்த நாள் கொண்டாட்ட அலப்பறை வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இப்படியான நிலையில் இந்த சீரியலில் மீனாவாக நடிக்கும் கோமதி பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அதில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர் அடிக்கடி செய்யும் லூட்டிகள் வீடியோவாக வெளியிடுவது போலத்தான் இப்போது விஜயாவும் இவரும் சேர்ந்து எடுத்த காமெடி ரீல்ஸ் ஒன்று பகிர்ந்து இருக்கிறார்கள். அதில் நடிகை பானுப்பிரியாவும் மனோரமாவும் பேசிய காமெடிக்கு இவர்கள் இருவரும் ரீல்ஸ் செய்திருக்கிறார்கள். அதில் விஜயாவை மீனா போடி என்று சொல்ல அதற்கு விஜயா மீனாவை கன்னத்தில் ஓங்கி அறைவது போன்று இருக்கிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதை பார்த்தால் முத்து விஜயாவை என்ன சொல்லப் போகிறார் என்று ரசிகர்கள் நக்கலாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.