ஜீவாவை மடக்கி பிடித்த ரோகிணி – மனோஜ்…. உள்ளே புகுந்து ரோகிணிக்கு ஆப்பு வைத்து முத்து.. சிறகடிக்க ஆசை…

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்நிலையில் ரசிகர்களுக்கு செம என்டர்டெயின்மென்ட் கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து சிறகடிக்க ஆசை இனி வரும் நாட்களில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதில் ரசிகர்கள் எதிர்பார்த்தப்படியே முத்து காரில் சுற்றிக் கொண்டிருக்கும் ஜீவா முத்துவிடம் நான் ரிஜிஸ்ட்ரேஷனுக்கு போவதற்கு முன்பாக பார்லர்க்கு போக வேண்டும் என்று சொல்ல, அதற்கு முத்து எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தவங்களோட பார்லர் இங்கே தான் இருக்கிறது. நீங்க அங்கேயே போய்க்கோங்க என்று ரோகினி பார்லரில் ஜீவாவை இறக்கி விடுகிறார்.

அப்போது பார்லருக்கு வந்த ஜீவாவை முதலில் யார் என்று தெரியாமல் ரோகிணி வரவேற்க, பிறகு ஜீவாவை பார்த்ததும் அதிர்ச்சியாகி ஜீவாவிடம் இது ஜீவா தானா? இல்லையா? என்று உறுதிப்படுத்த உங்களுடைய பெயர் என்ன என்று கேட்க அதற்கு அவரும் ஜீவா தான் என்று சொல்கிறார். உடனே அலார்ட் ஆன ரோகிணி மனோஜ்க்கு போன் போட்டு பியூட்டி பார்லருக்கு வர சொல்கிறார்.

மனோஜ் வழக்கம்போல எதற்காக அங்கே இப்ப வரவேண்டும் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டு இருக்க, அதற்கு ரோகிணி சீக்கிரமா பியூட்டி பார்லருக்கு வா இங்கேதான் அந்த ஜீவா வந்து இருக்கா என்று சொல்கிறார். அதே நேரத்தில் ஜீவாவிற்கு எந்த சந்தேகமும் வராமல் பியூட்டி பார்லரில் அவருக்கு மேக்கப் செய்வது போன்று பாவனை காட்டிக் கொண்டே இருக்கிறார்.

அங்கு மனோஜ் வந்துவிடுகிறார் முதலில் ஜீவாவிடம் மனோஜ் பணத்தை கேட்க அதற்கு ஜீவா பணத்தை தர முடியாது என்று மறுத்ததால் போலீசுக்கு போன் போட்டு ஜீவாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போகின்றனர். அங்கு வைத்து என்னுடைய பணத்தை வாங்கி தாங்க சார் என்று மனோஜ் சொல்ல அதற்கு ஜீவா நான் இவர்கிட்ட பணம் ஏமாத்துன ஆளே கிடையாது என்று முதலில் நடிக்கிறார்.

பிறகு அந்த பணத்தை தர முடியாது என்று பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அதே நேரத்தில் முத்து மீனாவுக்கு வாங்கிக் கொடுத்த பைக்கை மீனா நோ பார்க்கிங்கில் பார்க்செய்ததால் போலீஸ் அந்த பைக்கை தூக்கிக்கொண்டு வந்து விட்டனர். அதற்காக முத்துவும் மீனாவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தன்னுடைய காரில் சுற்றிக்கொண்டு இருந்தது தன்னுடைய அண்ணனை ஏமாற்றிய பெண் தான் என்ற உண்மை முத்துக்கு தெரியவரும்போது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. அதே நேரத்தில் வீட்டிற்கு தெரியாமல் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் ஜீவாவிடம் இருந்து பணத்தை வாங்க வேண்டும் என்று தான் முயற்சிசெய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு பணம் கிடைக்குமா? இல்லையா? என்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த பணம் கிடைத்தால் இதை வைத்து மனோஜ் கனடா போவதற்கு முயற்சி செய்வாரா? அல்லது நான் மனோஜை கனடாவுக்கு கூட்டிட்டு போறேன் என்று மீண்டும் ஜீவா ஏமாற்றுவாரா என பல கேள்விகளுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில், காவல் நிலையத்தின் உள்ளே முத்து என்ட்ரி கொடுத்து அங்கே நடக்கும் நிகழ்வுகளை பார்த்து, ஜீவாவிடம் பணத்தை பெற்று தந்தையிடம் கொண்டு சேர்ந்து விடுவார் என்றும். இதனால் குடும்பத்துக்கு தெரியாமல் ஜீவாவிடம் பணத்தை வாங்கி அமுக்கி விடலாம் என ரோகிணி போட்ட கனவெல்லாம் வீணாகி போகும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here