தனுஷை மன்னித்து மறுவாழ்வு கொடுத்த ரஜினிகாந்த் … செம்ம டென்ஷனில் லதா.. என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தனுஷ். ஆரம்பத்தில் தனுஷ் நடித்த மூன்று படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று இருந்தாலும் அடுத்தடுத்து அவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. அந்த கால கட்டத்தில் ரஜினிகாந்த் மகளை திருமணம் செய்து கொண்டிருந்தார் தனுஷ்.

இதனால் ரஜினிகாந்த் செல்வாக்கை பயன்படுத்தி தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றார். சினிமாவில் தனுஷ் சரிவை சந்தித்தபோதெல்லாம் மாமனார் ரஜினிகாந்த் செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் எழுந்து வந்தார். இந்தியில் அமிதாப்பச்சன் உடன் இணைந்து நடிக்கும் அளவுக்கு ரஜினிகாந்த் செல்வாக்கை பயன்படுத்தி கொண்டார் தனுஷ். தற்பொழுது மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்த பின்பு சினிமாவில் மிக பெரிய சரிவை சந்தித்துள்ளார் தனுஷ்.

மேலும் தனுஷ் மாமியார் லதா ரஜினிகாந்த், அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி தமிழ் மட்டுமின்றி பிற மொழி படங்களிலும் தனுஷ் இனி அடுத்த எந்த ஒரு படத்திலும் நடிக்காதபடி, தனக்கு நெருங்கிய சினிமா தயாரிப்பாளர்கள், சினிமா பைனான்சியர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தற்பொழுது தனுஷ் படத்தில் பணியாற்றி கொண்டிருந்தவர்கள் கூட பாதியில் வெளியேறி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் மீது தனுஷ்க்கு எப்போதும் ஒரு மதிப்பும் மரியாதையும் உண்டு, அதே போன்று தனுஷ் மீதும் ரஜினிகாந்துக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் உண்டு. அந்த வகையில் ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்த பின்பு இரண்டு அல்லது மூன்று முறை மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்தை சந்திக்க முயற்சி செய்துள்ளார் தனுஷ். ஆனால் ரஜினிகாந்த் மனைவி மற்றும் மகள் ஐஸ்வர்யா இருவரும் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ரஜினிகாந்தை ஒரு முறை சந்தித்து பேசினால். தன் மீது மாமனார் ரஜினிகாந்த் எப்போதும் போல நல்ல மதிப்பில் தான் இருக்கிறார் என்கிற செய்திகள் வெளியாகும், இதனால் தன்னுடைய இழந்த சினிமா மார்க்கெட்டை பிடித்துவிடலாம் என்றும், மேலும் தன்னை வைத்து படம் எடுக்க தயங்கி கொண்டிருப்பவர்களுக்கு, இனி அந்த தயக்கம் இருக்காது என்பதால் ரஜினிகாந்தை நேரில் சந்திக்க திட்டமிட்டிருந்தார் தனுஷ்.

இந்நிலையில் ரஜினிகாந்த்க்கு நெருக்கமானவர்களிடம், ரஜினிகாந்த் குறித்து பெருமையாக பேசிய தனுஷ், தற்பொழுது சினிமா துறையில் தான் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி எடுத்துரைத்துள்ளார். மேலும் மாமனாரை சந்திக்க பல முறை முயற்சி செய்தது அதற்கான வாய்ப்புகள் கிடைக்காததையும் வருத்ததுடன் தெரிவித்துள்ளார் தனுஷ். இந்த விஷயம் ரஜினியின் கவனத்துக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

உடனே தனுஷ் சினிமா வாழ்க்கைக்கு தடையாக தான் எந்த விதத்திலும் இருக்க கூடாது என உணர்ந்த ரஜினிகாந்த். மேலும் எதிர்காலத்தில் மீண்டும் தனுஷ் தன்னுடைய மகளுடன் இணையலாம் என்பதால், தனக்கு நெருக்கமான பிரபல சினிமா பைனான்சியர் மற்றும் தயாரிப்பாளர் அன்புச்செழியனை தொடர்பு கொண்டு தனுஷ்க்கு சினிமா வாய்ப்பு கொடுக்க ரஜினிகாந்த் சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அன்புசெழியனின் கோபுரம் புரோடக்ஷன் சார்பில் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை தனுஷ் இயக்க இருப்பதாக கூறபடுகிறது. சினிமாவில் மிக பெரிய சரிவை சந்தித்துள்ள தனுஷை மன்னித்து மறுவாழ்வு கொடுக்கும் விதத்தில் ரஜினிகாந்த் நடந்து கொண்டது, அவரது மனைவி லதா மற்றும் ஐஸ்வர்யா இருவரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் உடன் இரவில் அனிருத் அடித்த லூட்டி… வெளியானது பரபரப்பு..என்ன நடந்தது தெரியுமா.?