சும்மா இருந்த விஜய் சேதுபதியை அட்வைஸ் செய்கிறேன் என சிக்கலில் தவிக்கவிட்ட ரஜினி…

0
Follow on Google News

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சமீபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன, அதில் குறிப்பாக தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க முடிவு செய்யப்பட்டு. நடிகர் சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, விஷால் மற்றும் யோகிபாபு ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இவர்கள் மட்டுமின்றி சுமார் 15 முக்கிய நடிகர்கள் பெயரும் ரெட் கார்டு வரிசையில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, அந்த வரிசையில் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் பெயரும் இடம்பெற்றுள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, இதில் தனுஷ் தயாரிப்பாளர் ஒருவரிடம் மூன்று படத்திற்கு கால் சீட் தருகிறேன் என அட்வான்ஸ் வாங்கி கொண்டு, கால் சீட் கொடுக்காமல் இழுத்தடித்து வருவதாகவும்,

மேலும் அடுத்த மூன்று வருடங்களுக்கு பின்பு தான் கால் சீட் தரமுடியும் என டிமிக்கி கொடுத்து வருவதால், பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் கொடுத்த புகாரில் அடிப்படையில் தனுஷ் ரெட் கார்டு வரிசையில் இடம்பெற்றுள்ளார், ஆனால் பலரும் ஆச்சரிய படும் வகையில் இந்த வரிசையில் விஜய் சேதுபதி பெற்றது தான். விஜய் சேதுபதி டஜன் கணக்கில் படங்களில் நடிப்பதாக ஒப்பு கொண்டு, கால் சீட் கேட்டு எந்த தயாரிப்பாளர் வந்தாலும் அட்வான்ஸ் பெற்று கொண்டு கால் சீட் தருகிறேன் என உறுதி அளித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்து வரும் நிலையில், தமிழ், இந்தி தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடிக்கும் வாய்ப்பே பெற்று வருகிறார். இந்த நிலையில் விஜய் சேதுபதி பொதுவாக படத்தின் கதையை கேட்காமல் , கிடைக்கும் வரும் பட வாய்ப்புகள் எல்லாத்துக்கும் கால்ஷீட் தருகிறேன் என அட்வான்ஸ் வாங்கிக் கொள்கிறோமே நம்மால் தேதி கொடுக்க முடியுமா என சற்றும் யோசிக்காமல் வாங்கிய அட்வான்ஸ் தொகையில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளார் .
ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி சொன்னது போல் கால் சீட் தராததால் காத்திருந்த தயாரிப்பாளர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள், மேலும் பல தயாரிப்பாளர்கள் பைனான்சியர்களிடம் கடன் பெற்று விஜய் சேதுபதிக்கு அட்வான்ஸ் கொடுத்ததால் தங்களுக்கு கால் சீட் தரவில்லை என்றால் அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என்றும் நெருக்கடி கொடுத்தனர்.

விஜய் சேதுபதி கால் சீட் கொடுக்க முடியவில்லை என அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்தாலும் தயாரிப்பாளர்கள் வட்டியுடன் கேட்பதால் மிகப்பெரிய சிக்கலில் சிக்கிவிட்டார் விஜய் சேதுபதி. இருந்தும் கால் சீட் தர முடியாத தயாரிப்பாளர்களுக்கு வாங்கி அட்வான்ஸ் தொகையை சுமுகமாக பேசி திருப்பி கொடுத்து வருகிறார்.

ஆனால் சில தயாரிப்பாளர்கள் பிடிவாதமாக எங்களுக்கு கால்ஷீட் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் வாங்கிய அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் திருப்பி தர வேண்டும் என்ற இறுக்கி பிடித்து வருவதால், திக்குமுக்காடி திணறி வருகிறாராம் விஜய் சேதுபதி. இந்த நிலையில் விஜய் சேதுபதியின் கணக்கு வழக்கு இல்லாமல் டஜன் கணக்கில் படத்தில் கமிடாகி அட்வான்ஸ் தொகையை பெற்று தற்போது கால் சீட் கொடுக்க முடியாமல் திணறுவதற்கான முக்கிய காரணம் ரஜினி என கூறப்படுகிறது.

அதாவது நடிகர் ரஜினியுடன் பேட்டை படத்தில் விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருந்தபோது, ரஜினி விஜய் சேதுபதிக்கு சில அட்வைஸ் தெரிவித்துள்ளார், தற்போது வில்லனாக நீங்கள் நடித்து வருகிறீர்கள், உங்களுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது, மேலும் பட வாய்ப்பு அதிகமாக வருகிறது காற்றுள்ள போதே தூற்றி கொள்ளுங்கள், வரும் வாய்ப்பு தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சும்மா இருந்த விஜய் சேதுபதியை ரஜினிகாந்த் தான் உசுப்பேத்தி விட்டதாக கூறப்படுகிறது.இதன் பின்பு தான் விஜய் சேதுபதி எந்த வாய்ப்பு வந்தாலும் கதையை கூட சரியாக கேட்காமல் அட்வான்ஸ் வாங்கி பின்பு கால் சீட் தரமுடியாமல் பெரும் சிக்கலில் சிக்கி தவித்து வருகிறார் என கூறப்படுகிறது.