பயில்வானிடம் மன்னிப்பு கேட்ட பார்த்திபன்.. அந்த நடிகையால் பார்த்திபன் சிக்கி கொண்ட பரிதாபம்.!

0
Follow on Google News

இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்து தற்பொழுது வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் படம் இரவில் நிழல். இந்த படம் பார்த்து நடிகர் பார்த்திபனை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி சினிமா பிரபலங்கள் வாழ்த்தி வரும் இந்த சுழலில். மறுபக்கம் சர்ச்சைக்குரிய வகையில் சிக்கலிலும் சிக்கி என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார் நடிகர் பார்த்திபன்.

இரவில் நிழல் படத்தில் மிக கவர்ச்சியாக நடித்துள்ளவர் இந்த படத்தில் நடித்த நடிகைகளான, பிரிட்டா மற்றும் ரேகா நாயர். இதில் ரேகா நாயர் மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தோழி என்று சமீபத்திய பேட்டிகளில் பேசி தன்னை பிரபல படுத்தி கொண்டவர். இவர் குறித்து சமீபத்தில் யூ ட்யூப் சேனல் ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன். அவருடைய அந்தரங்க விஷயங்களை பற்றி பேசி இருந்தார். மேலும் அவர் ஒழுக்கம் குறித்து சந்தேகம் எழுப்பும் வகையிலும் பயில்வான் பேசியிருந்தார்.

இந்நிலையில் நேற்று திருவான்மியூர் பீச்சில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த பயில்வானிடம் நேரடியாக சண்டையிட்டார் ரேகா நாயர். நான் என்ன செய்தால் உனக்கென்ன, நான் என்ன உன் பொண்டாட்டியா.? இல்லை எனக்கு நீ விலக்கு பிடித்தியா.? நான் அவுத்து போட்டு கூட நிற்பேன், நீ வேண்டுமென்றால் பார்க்கிறாயா.? நான் அப்படி தான் அம்மணமாக நடிப்பேன் உனக்கு என்ன என்று நாடு ரோட்டில் பொதுமக்கள் மத்தியில் பயில்வான் உடன் சண்டையிட்டார் ரேகா நாயர்.

இதற்கு,வா.. காவல் நிலையத்துக்கு செல்வோம் என பயில்வான் அழைக்க, அதற்கு மறுத்துவிட்டார் ரேகா நாயர். இந்த சம்பவம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், ரேகா நாயர் தன்னிடம் ஆடையை தூக்கி காண்பித்து நான் இங்கே அவுத்து போட்டு நிற்கிறேன் நீ பார்க்கிறாயா.?என கேட்டார், அவருடைய சுய விளம்பரத்துக்காக என்னிடம் சன்டையிட்டு அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

யாரோ சிலரின் தூண்டுதலால் என்னிடம் வந்து சண்டையிட்டுள்ளார். இதற்க்கெல்லாம் பயப்பட மாட்டேன். தொடர்ந்து பலரின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றாமல் விடமாட்டேன் என தெரிவித்த பயில்வான். மேலும் இது குறித்து நடிகர் பார்த்திபனை தொடர்பு கொண்டு பேசிய போது. தான் நடித்த இரவில் நிழல் படம் வெளியிடும் திரையரங்குகளுக்கு சென்று உடல் நிலை சரியில்லை என்றாலும் படத்தின் ப்ரோமோஷன் செய்து கொண்டிருக்கிறேன்.

ஆனால் இந்த படத்தில் நடித்த பிரிட்டா மற்றும் ரேகா நாயர் இருவரும் இந்த படம் ஆபாச படம் போன்று பேட்டிகளில் பேசி வருவது எனக்கே பிடிக்கவில்லை. ரேகா நாயர் உங்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதற்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என தெரிவித்த பார்த்திபன். ரேகா நாயரை கண்டித்து வைக்கிறேன் என தெரிவித்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை காலி செய்யும் தமிழ் நடிகர்கள்… ஆந்திராவில் குடியேற என்ன காரணம் தெரியுமா.?