நடிகை மடோனா பற்றியும் அருவருக்க பேசிய மன்சூர் அலிகான்… அதுவும் விஜய் முன்பே நடந்த கேவலம்..

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜுன் என பல முன்னனி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்திய பேட்டி ஒன்றில் மிக அருவருக்க தக்க வகையில் பேசிய பேச்சு, மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தன்னுடன் நடித்த சக நடிகைகளை மிக கீழ்த்தரமாக பேசியிருந்தார் மன்சூர் அலிகான்.

பேட்டி ஒன்றில் லியோ படம் குறித்து பேசிய மன்சூர் அலிகான். எங்கப்பா கற்பழிக்க விட மாட்டேன் என்கிறார்கள், இதை நான் அங்கேயே பேசலாம் என்று நினைத்திருந்தேன். அங்கே கலகத்தை உண்டு பண்ண சிலர் இருப்பதால் விட்டுவிட்டேன் என தெரிவித்த மன்சூர் அலிகான். எள்ளலும் எனக்கும் ரொம்ப ஆசையாக இருந்தது திரிஷா கூட நடிக்கிறமா, நிச்சயமாக பெட்ரூம் சீன் இருக்கும்.

தூக்கி கட்டில்ல குஷ்புவை போட்ட மாதிரி, ரோஜாவை போட்ட மாதிரி போடலாம் என மிகவும் அருவருக்கதக்க வகையில் பேசிய மன்சூர் அலிகான், மேலும் 150 படத்தில் நம்ம பண்ணாத ரேப்பா.? நம்ம பண்ணாத அட்டூழியமா என இதற்கு முன்பு ரேப் சீன்களில் நடித்ததை வெட்கமே இல்லாமல் பெருமையாக தம்பட்டம் அடித்த மன்சூர் அலிகான்.மேலும் லியோ படம் குறித்து தொடர்ந்து பேசியவர்.

னுமார் சஞ்சீவி மலையை கொண்டு சென்ற மாதிரி திரிஷாவை அப்படியே காஷ்மீர் கொண்டு சென்று அவங்க பாதம் தரையில் படாத அளவுக்கு அப்படியே கொண்டு போகிறார்கள், கண்ணிலே காட்டவே மாட்டேன் என்கிறார்கள். என மன்சூர் அலிகான் பேசிய பேச்சு மிக பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது, மேலும் இவரின் இந்த அருவருக்கத்தக்க பேச்சுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.

அதே போன்று நடிகர் குஷ்பு குறித்து மிக கீழ்த்தரமாக மன்சூர் அலிகான் பேசியிருந்ததால், தேசிய மகளிர் ஆணையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என குஷ்பு தெரிவித்ததை தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்கும் வேலைகளை தொடங்கியுள்ளது தேசிய மகளிர் ஆணையம். இந்நிலையில் மன்சூர் அலிகான் இது போன்று அநாகரிகமாக பேசுவது , நடந்து கொள்வது இதுவே முதல் முறை அல்ல.

இது போன்று பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார் மன்சூர் அலிகான், லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் கண்முன்னே இது போன்ற அருவருக்கத்தக்க பேச்சை அரங்கேற்றியவர் தான் மன்சூர் அலிகான். லியோ வெற்றி விழாவில் பேசிய மன்சூர் அலிகான். திரிஷா கூட நடிக்க வேண்டும் என்றதுமே நான் ஒப்புக்கொண்டேன், ஆஹா… ஹீரோயின்களாக இருக்கு, வழக்கம் போல அது, இது, தஇப்படி எல்லாம் இருக்கும் என்று நினைத்தேன்.

ஆனால் திரிஷா கிட்டவே நெருங்க விடவில்லை, சரி அதுதான் கிடைக்கல, இந்த மடோனா பாப்பாவாவது கிடைக்குமா என்று எதிர்பார்த்தேன், என லியோ படத்தில் நடித்த மற்றொரு நடிகை மடோனா பற்றி பேசிய மன்சூர் அலிகான், செட்டுக்குள்ள மடோனா வந்தாங்க எனக்கு ஒரே மகிழ்ச்சி, ஆகா மடோனா இருக்காங்கப்பா, நம்ம ஏதாவது கூட ஜாலியா விளையாடலாம் என்று பார்த்தால், எனக்கு அவங்க தங்கச்சி ரோல் என சக நடிகைகள் பற்றி லியோ வெற்றி விழாவில் விஜய் கண் முன்னே மன்சூர் அலிகான் பேசிய போது விஜய் அப்போதே மன்சூர் அலிகானை கண்டித்திருக்க வேண்டும்.

அப்படி கண்டித்திருந்தால். இன்று மீண்டும் திரிஷா, குஷ்பு, ரோஜா குறித்து அருவருக்க தக்க வகையில் மன்சூர் அலிகான் பேசியிருக்க மாட்டார். அதே நேரத்தில் விஜய் இருக்க வேண்டிய இடத்தில் நடிகர் விஜயகாந்த் இருந்திருந்தால் மன்சூர் அலிகான் எப்படி பேசி இருப்பாரா.? என பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் மன்சூர் அலிகான் விவகாரத்தில் விஜய் கண்டிக்காதது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.