மானம், மரியாதை போச்சு… லெஜெண்ட் சரவணன் குடும்பத்தில் வெடித்த பிரச்சனை… என்ன பிரட்சனை தெரியுமா.?

0
Follow on Google News

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன். இவர் ஆரம்பத்தில் தன்னுடைய கடை விளம்பரங்களில் அன்றைய காலகட்டத்தில் முன்னணியில் இருக்கக்கூடிய நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுத்து சரவணா ஸ்டோர்ஸ் கடை விளம்பரங்களில் நடிக்க வைத்துக் கொண்டிருந்தார். பின்பு அவரே அவருடைய கடையின் விளம்பரத்தில் நடிக்க தொடங்கினார்.

மேலும் அவர் நடிக்கும் விளம்பரப் படங்களில் முன்னணியில் இருக்கக்கூடிய நடிகைகளை அதிக சம்பளம் கொடுத்து தன்னுடன் ஆட்டம் போட வைத்தவர் அருள் சரவணன். இவர் நடித்த விளம்பர படங்கள் கேலி கிண்டல் காரணமாகவே பிரபலமானது. இந்நிலையில் அருள் சரவணன் சினிமா ஆசையை புரிந்து கொண்ட அவருடைய விளம்பரப்பட இயக்குனர் ஜேடி மற்றும் ஜெரி ஆகியோர் அருள் சரவணனை கதாநாயகனாக நடிக்க வைத்து படம் இயக்கும் முடிவுக்கு வந்தனர்.

ஹீரோவாக வேண்டும் என்கின்ற தன்னுடைய நீண்ட நாள் கனவை நினைவாக்கும் விதத்தில், இந்த படத்தை அருள் சரவணன் சொந்தமாக தயாரித்து நடித்தார். சினிமாவில் நடிகனாக வேண்டும் என்கின்ற ஆசை வருவது இயல்புதான், ஆனால் அதற்கான தகுதி நமக்கு இருக்கின்றதா என்பதை பரிசோதனை செய்துவிட்டு தான் நடிக்க வேண்டும்.

அந்த வகையில் அருள் சரவணன் சினிமாவில் நடிக்க நடிப்பதற்கு முன்பு நடிப்பை ஓரளவு கற்று அறிந்திருக்க வேண்டும். ஆனால் எதுவுமே தெரியாமல், தன்னிடம் பணம் இருக்கின்ற ஒரே காரணத்தினால் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் அருள் சரவணன். மேலும் இந்த படத்திற்கு அதிக செலவில் விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு சென்ற சரவணன் அதிகம் பணம் கொடுத்து தன்னுடன் முன்னணி நடிகைகளை அழைத்து சென்றார்.

இந்நிலையில் தி லெஜன்ட் படம் வெளியாகி இந்த படத்தில் நடித்த அருள் சரவணனை கேலி கிண்டல் செய்வதற்காக திரையரங்கு சென்றவர்களுக்கு கூட ஏமாற்றமே தான் மிஞ்சியது. அந்த வகையில் இந்த படம் கேலி கிண்டல் செய்யக்கூட லாயக்கு இல்லை என்பது போல் அமைந்தது லெஜன்ட் படம். சுமார் 45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லெஜெண்ட் படம், 25 நாள் முடிவில் வெறும் 8.5 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த 8.5 கோடியில் தயாரிப்பாளருக்கு லாபம் மட்டும் எவ்வளவு கிடைத்திருக்கும் என்பது இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில் படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்ட பணம் கூட வரவில்லை என கூறப்படுகிறது. முதல் படத்திலேயே பெரும் நஷ்டம் அடைந்த அருள் சரவணன் அடங்குவதாக தெரியவில்லை. மீண்டும் ஒரு படம் ஹீரோவாக நடித்து ஆவேன் என பிடிவாதம் பிடித்து வருகிறார்.

இந்நிலையில், அருள் சரவணனுக்கு எதிராக அவரது குடும்பத்தில் பிரச்சனை வெடித்துள்ளது. சினிமா ஆசையின் காரணமாக படத்தில் ஹீரோவாக நடித்து பல கோடி இழந்தது மட்டுமல்லாமல், குடும்பத்தினர் வெளியில் சொந்தம் பந்தங்கள் மற்றும் நெருங்கிய நட்பு வட்டத்தில் மத்தியில் தலை காட்ட முடியாத அளவுக்கு சரவணன் நடிப்பை கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.

நீங்கள் படத்தில் நடிப்பதால் பல கோடி பணத்தை இழந்தது மட்டுமில்லாமல் நம்மடைய குடும்பத்தின் மானம், மரியாதை மொத்தமும் போச்சு. அதனால் இந்த சினிமா ஆசையை கைவிட்டு, ஒரு தொழிலதிபராக மானம், மரியாதையுடன் வாழ்வதற்கு வழியை பாருங்கள், என ஒட்டுமொத்த குடும்பம் ஒன்று சேர்ந்து அருள் சரவணனுக்கு அறிவுரை கூறி வருவதாக கூறப்படுகிறது.

சமந்தாவால் சிறைக்கு செல்லும் லிங்குசாமி… சமந்தா வலையில் லிங்குசாமி சிக்கியது எப்படி தெரியுமா.?