தனுஷிடம் இருந்து அதிதி சங்கருக்கு வந்த அழைப்பு… சங்கர் போட்ட கண்டிசன் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கர் மருத்துவப் படிப்பு முடித்துவிட்டு, படித்த படிப்புக்கு ஏற்ப மருத்தவ பணியை செய்யாமல், அவருடைய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையில் விருமன் படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படத்தில் தந்தை சங்கர் சிபாரிசில் வாய்ப்பை பெற்று இருந்தாலும், அதிதி சங்கர் நடிப்பு, நடனம் என அனைத்தும் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

மேலும் விருமன் படத்தில் இடம்பெற்ற மதுரை வீரன் என்கின்ற பாடலை அதிதி சங்கர் தன்னுடைய சொந்த குரலில் பாடியுள்ளார். இந்த பாடல் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதனை தொடர்ந்து முதல் படத்திலே ஒரு புதுமுக நடிகை போன்று இல்லாமல், ஏற்கனவே பல படங்கள் நடித்த அனுபவம் வாய்ந்த ஒரு நடிகை போல் அதிதி சங்கர் நடித்துள்ளது, புலிக்குப் பிறந்தது பூனையாகுமா.? என்பதை நிரூபித்து விட்டார்.

விருமன் படத்தை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த புதிய படத்தில் கமிட் ஆகி உள்ளார் அதிதி. இரண்டாவது பட வாய்ப்பை முதல் படம் விருமன் வெளியாவதற்கு முன்பே பெற்று விட்டார் அதிதி. மேலும் அதிதி சங்கர் கமிட்டாகும் ஒவ்வொரு படத்தின் கதை மற்றும் அந்த படத்தின் ஹீரோ என அனைத்தையும் தீவிர ஆய்வு செய்த பின்பு தான் அவருடைய தந்தை சங்கர் ஒப்புக் கொள்வதாக கூறப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் திருச்சிற்றம்பலம். இந்தப் படத்தை தொடர்ந்து நானே வருவேன், வாத்தி ஆகிய படங்களில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்துவிட்டு நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் சொந்தமாக படம் தயாரிக்கும் முடிவில் இறங்கியுள்ளார் தனுஷ்.

இந்நிலையில் தன்னுடைய சொந்த தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க தனுஷ் தரப்பில் இருந்து சங்கர் மகள் அதிதி சங்கருக்கு அழைப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. காமெடி கலந்த காமர்ஷியல் படம் என்பதால், இந்த படத்தில் அதிதி நடித்தால் பொருத்தமாக இருக்கும் என தனுஷ் முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் நடிக்க அதிதி விருப்பத்துடன் இருந்துள்ளார்.

ஆனால் தனுஷ் உடன் ஜோடி சேர்ந்து அதிதி நடிக்க அவருடைய தந்தை சங்கர் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசு கிசுவில் சிக்கியதை மனதில் வைத்து தான், தன்னுடைய மகளின் பாதுகாப்பு கருதி தனுஷ் படத்தில் நடிக்க மகளை அனுமதிக்கவில்லை சங்கர் என கூறப்படுகிறது.

மணிரத்தினத்திற்கே நம்பிக்கை இல்லை… பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர் பரிதாபம் என்ன தெரியுமா.?