எல்லாமே கார்த்திக்கு தெரியும்…. அமீர் விவகாரத்தில் என்ன நடந்தது…. புட்டு புட்டு வெச்ச குட்டி சாக்கு…

0
Follow on Google News

கடந்த 2007 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கார்த்திக், முதல் படத்திலே தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றார். இந்நிலையில் அண்மையில் பருத்திவீரன் திரைப்படத்தின் தயாரிப்பு சம்பந்தமாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா சில தகவல்களை வெளியிட்டு இருந்தார்.

அதில் பருத்திவீரன் திரைப்படத்தின் இயக்குனர் அமீர் அவர்களை கடுமையாக சாடி அவர் பல விஷயங்களை பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் சமுத்திரக்கனி, இயக்குனர் சுதா கொங்கரா, சசிகுமார், பாரதிராஜா, கவிஞர் சினேகன் உள்ளிட்ட பலரும் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அமீர் ஒரு பேட்டியில், கார்த்திக் நடித்த ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை யாரும் அழைக்கவில்லை. அதனால் நானும் போகவில்லை. பருத்திவீரன் படத்தின் வெற்றியால் தான் கார்த்திக் இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறார். சிவக்குமார், சூர்யா, கார்த்திக் குடும்பத்துடன் எனக்கு நெருக்கமான பழக்கம் இருந்தது. ஆனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் எங்களுடைய நட்பை கெடுத்து விட்டார்.

அவரால் எனக்கு இரண்டு கோடிக்கும் மேல் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் காரணம். அவரிடம் எனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு இது வரை நீதி கிடைக்கவில்லை என்று கூறி இருந்தார். தற்போது கோலிவுட் வட்டாரத்தில் இந்த விவகாரம் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இப்படி கோலிவுட் வட்டாரத்திலேயே அமீரின் விவகாரம் தான் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருக்கும் நிலையில் கார்த்திக், சூர்யா இருவருமே அமைதி காப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

இந்நிலையில் பருத்திவீரன் படத்தில் கார்த்தியுடன் குட்டி சாக்கு என்ற கதாபாத்திரத்தில் நடித்த குட்டி பையன் விமல்ராஜ் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில், ஞானவேல் அவர்கள் பேசிய வீடியோவை பார்த்தேன். அதில் அமீர் மாமாவை பேசிய கண்டிக்கத்தக்கது. ரோட்டில் விளையாடிக்கொண்டு இருந்த என்னை நடிப்பு சொல்லி கொடுத்த அவர்மீது பழியை போடுவது வேதனை தருகிறது.

படம் ஆரம்பத்தில் இருந்த மகிழ்ச்சியான அமீர் மாமா அதன் பிறகு அவருக்கு அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் அதை அனைத்தையும் படபிடிப்பு தளத்தில் அருகில் இருந்து பார்த்தவன் நான். எனவே ஞானவேல் அவர்கள் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும். எனக்கும் கார்த்திக் அண்ணாவுக்கும் அது தான் முதல் படம். அவரும் அந்த சூழலை நன்கு அறிவார் தற்போது அவர் அமைதி காப்பது மிகவும் தவறான செயல் என தெரிவித்துள்ளார்.

மேலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், வாய்மையும், நாணும் இது மூன்றிலும் இருந்தும் விலகமாட்டார் எனவும் திருக்குறளையும் தன்னுடைய அறிக்கையில் சேர்த்து இருக்கிறார். அதாவது நடிகர் கார்த்திக் இந்த விஷயம் குறித்து நன்கு தெரிந்தவர், அவர் அமைதி காப்பது மிகவும் தவறான செயல்.” என குறிப்பிட்ட குட்டிச்சாக்கு, திருக்குறள் ஒன்றை சுட்டி காட்டி “ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார்” , அதாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணயம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார். தெரிவித்துள்ளது, இந்த விவகாரத்தில் ஏற்கனவே கார்த்திக் , சூர்யா ஆகியோர் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில்,

தற்பொழுது திருக்குறள் மூலம் கார்த்திக் க்கு அறிவுரை வழங்கி, கார்த்திக் கொஞ்ச நஞ்ச மானத்தையும் பருத்திவீரன் படத்தில் நடித்த குட்டி சாக்கு வாங்கிவிட்டார் என பாலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.