உயிருக்கு உயிரை காதலித்த கமல் ஸ்ரீவித்யா… குணா படம் போன்று மனதை உருக வைத்த நிஜ காதல்..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் பல புதுமையான டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும், அதன்பிறகு பல தடைகளை கடந்து சினிமாவில் நாயனாக அறிமுகமாக இவருக்கு முதல் வாய்ப்பு கொடுத்தவர் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர். தொடர்ந்து அவரது இயக்கத்தில் பல படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன், நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

கமல் ஹாசன் நடிப்பு, இயக்கம் என சினிமாவில் மட்டும் தனித்து தெரிபவர் இல்லை. தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் எப்போதுமே தனித்துவமாக இருப்பவர். தீவிர கடவுள் மறுப்பாளரான அவர் மிகத்தீவிரமான வாசிப்பாளரும்கூட. அதேபோல் தனது கருத்தையும் யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படையாக கூறுவார்.

சினிமாவில் காதலர்களாக நடிக்கும் பலரும் நிஜ வாழ்க்கையிலும் காதலர்களாக இருப்பார்கள் என்று பலரும் நினைப்பது உண்டு. அந்த வகையில், தன்னுடன் இணைந்து பல படங்களில் நடித்த நடிகர் கமல்ஹாசனை ஸ்ரீவித்யா காதலித்தார் என்ற தகவல் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலம். இப்படி ஒரு நிலையில் ஸ்ரீவித்யா, கமல் குறித்து பேசிய வீடியோ ஒன்று சிறிது நாட்களுக்கு முன்பு கூட வைரலாகியது.

அதில் பேசிய அவர் ‘ நானும் அவரும் காதலிச்சது ஒட்டுமொத்த ‘ துறைக்கும் எங்கள் இரண்டு குடும்பத்திற்கும் தெரியும். ஒரு நாள் என் அம்மா எங்கள் இருவரையும் அழைத்து. உங்கள் இருவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இதெல்லாம் வேண்டாம் என்று சொன்னார். இதனால் அவருக்கு மிகுந்த கோபம் வந்துடிச்சி. அதன் பின்னர் அவர் என்னிடம் பேசவே இல்லை. திடீர்ன்னு ஒரு நாள் அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாக நான் கேள்விப்பட்டவுடன் நான் அவரை இழந்துவிட்டேன் என்று அப்படியே உறைந்து போனேன்’ என்று பேசி இருக்கிறார்.

1973-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற படத்தில் முதன் முதலாக இணைந்து நடித்த கமல்ஹாசன் – ஸ்ரீவித்யா ஜோடி, அடுத்து அபூர்வ ராகங்கள், அண்ணை வேளாங்கண்ணி என சில படங்களில் நடித்திருந்தனர். 1978-ல் கமல்ஹாசன் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்ட நிலையில், அதே ஆண்டு ஜார்ஜ் தாமஸ் என்பரை ஸ்ரீவித்யா திருணம் செய்துகொண்டார்.

ஆனால், எத்தனையோ திரைப்படங்களில் பலருடைய மனதை கவர்ந்த ஸ்ரீவித்யா அவருடைய நிஜ வாழ்க்கையில் பட்ட வேதனை யாரும் பட்டு இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும் அவ்வளவு வேதனைகளையும் ஸ்ரீவித்யா அனுபவித்திருக்கிறார். 1980-ம் ஆண்டு கணவரை விவகாரத்து செய்த அவர் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில், 1987-ம் ஆண்டு கமல்ஹாசனுடன் புன்னகை மன்னன், நம்மவர், காதலா காதலா, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவித்யா தனது கடைசி நாளில் கமல்ஹாசனை பார்க்க விரும்பிய நிலையில், அவரும் சென்று பார்த்து வந்துள்ளார். 2006-ம் ஆண்டு ஸ்ரீவித்யா மரணமடைந்தார்.

இந்நிலையில் கமல் ஹாசனின் நண்பரும், இயக்குநருமான சந்தான பாரதி தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கமல் – ஸ்ரீவித்யா காதல் குறித்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “கமல் – ஸ்ரீவித்யாவின் காதல் உண்மையானது. ஸ்ரீவித்யாவுக்கு கமல் ஹாசன் உதவியாகத்தான் இருந்தார். அவர்களால் ஏனோ வாழ்க்கையில் ஒத்துபோக முடியவில்லை. அதற்கென சில காரணங்களும் இருந்தன.

ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை கடைசிவரை சரியாக போகவில்லை. இதனால் அவர் ரொம்பவே கஷ்டப்பட்டார். அதனால்தான் தனது கடைசி நாட்களில்கூட கமல் ஹாசனை மட்டுமே பார்க்க விரும்பினார். அதனையடுத்து கமலும் ஸ்ரீவித்யாவை போய் பார்த்தார். இருவரும் காதலிப்பது எங்களுக்கு தெரியும். ஆனால் தங்கள் காதல் நிறைவேறாது என்பதை தெரிந்து கமல் ஹாசன் ரொம்பவே சிரமப்பட்டார்” என்றார்.