வாய்ப்பு கேட்டு போன வணிதாவையும் விட்டு வைக்காத கமல்… நடந்த சம்பவத்தை போட்டுடைத்த வனிதா..

0
Follow on Google News

கடந்த 105 நாட்களாக நடைபெற்று வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவுக்கு வந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே நிகழ்ச்சிக்கு உள்ளே சக போட்டியாளர்களாலும் சமூக வலைதளங்களிலும் எதிர்பார்க்கப்பட்டது போன்றே போட்டியின் நடுவில் ‘வைல்ட் கார்ட்’ என்ட்ரியாக உள்ளே நுழைந்த தொகுப்பாளினி அர்ச்சனா ‘பிக் பாஸ்’ பட்டத்தை வென்றார். வெற்றியாளருக்கான கோப்பையை நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன் வழங்கினார். இந்நிலையில் கமல் பற்றி வனிதா விஜயகுமார் ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார்.

வனிதாவுக்கும் பிக் பாஸுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேட்டால் அவர் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர். அதுவும் ஒரு சில வாரங்களிலேயே போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். பிக் பாஸ் மூலம் தனக்கு வாய்ப்புகள் கிடைத்ததை புரிந்து கொண்டு இவரே பிக் பாஸ் விமர்சகராகவும் மாறிவிட்டார். போதாத குறைக்கு தன் மகள் ஜோவிகாவை இந்த சீசனில் உள்ளே அனுப்பி மொக்கையும் வாங்கினார்.

இந்நிலையில் இவர் கமல் பற்றி திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கமல் சார் படத்தில் நடிக்க வாய்ப்புக் கேட்டேன். அதற்கு அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். ஆனால், எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு தரவில்லை. மேலும், பிக் பாஸ் அல்டிமேட்டிலும் கலந்து கொண்ட போது கூட கமல் சார் வாய்ப்புத் தரவில்லை. பிக் பாஸ் சீசன் 3ல் தர்ஷனுக்கு டைட்டில் கிடைக்கவில்லை என்றாலும் தன்னுடைய தயாரிப்பில் ஒரு படத்தில் அவரை ஹீரோ ஆக்குகிறேன் என கமல் வாக்கு கொடுத்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பே தரவில்லை” என்று கூறியுள்ளார்.

பிக் பாஸ் தொகுப்பாளர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் பிக் பாஸ் போட்டியாளர்கள் பலர் நடித்திருந்தனர். குறிப்பாக ஷிவானி நாராயணன். இவர் சின்னத்திரையில் நடித்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கமலஹாசன் படத்தில் நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி பிக் பாஸ் இன் கடந்த சீசன் போட்டியாளர்களான மைனா மற்றும் மகேஸ்வரிக்கும் கமலஹாசன் அவர்கள் விக்ரம் படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

இவர்கள் இருவருமே சின்ன திரையில் மூலம் பிரபலம் அடைந்தவர்கள் தான். தற்போது கமல்ஹாசன் மூலமே இவர்கள் வெள்ளி திரைக்கு வந்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த சீசனின் மிகப் பிரபலமான போட்டியாளரான மாயாவிற்கே கமல்ஹாசன் தான் வாய்ப்பு கொடுத்தார். இவர்கள் இருவரும் இணைந்து விக்ரம் மற்றும் லியோ படத்தில் நடித்துள்ளனர். இவற்றையெல்லாம் குறிப்பிட்டு வனிதாவை அனைவரும் திட்டி வருகின்றனர்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் சாண்டி மாஸ்டர். இவர் பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்று இரண்டாம் இடத்தைக் கைப்பற்றினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாண்டி மாஸ்டர் லெவல் எங்கோ போனது. ஏராளமான படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றும் வாய்ப்பு பெற்றதோடு சினிமாவில் நடிகனாகவும் அறிமுகமானார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் சிக்ஸ் பேக் கெட்டப்பில் கலக்கலாக நடித்துள்ளார். தற்போது இவரும் கமலுடன் இணைந்து விக்ரம் நடிக்க உள்ளார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவிஞனின் டாடா படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய கமல், தன்னுடைய ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் தயாரிப்பின் கீழ் பணியாற்றலாம் என உறுதியும் கொடுத்திருந்தார். கமல் நடிக்கும் படங்களும், பிக் பாஸ் நிகழ்ச்சியும் வேறு வேறு இல்லை என்பது போல் தான் இருக்கிறது.

அவருடன் படங்களில் நடித்த ஒரு சிலருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வாங்கிக் கொடுக்கிறார். அதே போன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கொடுக்கிறார். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களுக்கும், தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பட வாய்ப்பு கொடுக்க இருக்கிறார் கமல். மாயா கிருஷ்ணன் , பிக் பாஸ் முடித்த கையோடு கமலஹாசனின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. சின்னத்திரை நடிகை அர்ச்சனாவும் இந்த லிஸ்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.