நயன்தாராவுக்கு நடந்ததை பொறுத்து கொள்ள முடியாது…. களத்தில் குதித்த வெற்றிமாறன்… 

0
Follow on Google News

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான அன்னபூரணி படம்  கதாநாயகிக்கு  முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைந்தது, அதாவது ஒரு பெண் சாதனை படைக்க வேண்டும் என்றால் அந்தப் பெண் சாதி மதம் என அனைத்தையும் கடந்து தான் வரவேண்டும் என்பதை சொல்லும் விதமாக அந்த படத்தின் கதை அமைந்துள்ளது.ஆனால் அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, 

அதாவது இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் பெரும்பாலும் கடவுளாக வணங்கப்படும் ஸ்ரீ ராமரை இழிவு படுத்தும் விதத்தில்,  ஸ்ரீ ராமரே அசைவம் சாப்பிடக்கூடியவர் தான் என்று நயன்தாரா அன்னபூரணி படத்தில் பேசிய வசனம், அதுவும் தற்போது அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்கும் இந்த வேலையில் இந்த படம் வெளியாகி அதில் இடம்பெற்ற ஸ்ரீ ராமர் குறித்து நயன்தாரா பேசிய வசனம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தை தமிழ்நாட்டில் யாரும் சீண்ட கூட இல்லை என்றே சொல்லலாம், இந்நிலையில் ஓடிடியில் இந்த படம் வெளியிடப்பட்டது, இதில் ராமர் குறித்து நயன்தாரா  பேசிய சர்ச்சை கூறிய வசனத்தினால் மும்பையில் சில இந்துத்துவா அமைப்பினர் அந்த அன்னபூரணி படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகை என ஓட்டு மொத்தத்தினர் மீதும் வழக்கு பதிவு செய்து செய்துள்ளனர், இதனால் நயன்தாரா மற்றும் அந்த படத்தில் இயக்குனர் உட்பட பலரும் மும்பை நீதிமன்றம் செல்லும் நிலை உருவானது, இந்த நிலையில் இந்த விவகாரத்தை வளரவிட்டால் மிகப்பெரிய சிக்கலில் சிக்கி விடுவோம்.

அந்த வகையில்  இந்த  சிக்கலில் இருந்து தப்பிக்க ஓடிடி  தளத்தில் தற்போது ஒளிபரப்பான அன்னபூரணி படத்தை தற்காலியாக நிறுத்துவதாகவும், மேலும் அந்த படத்தில் இடம்பெற்ற சர்ச்சை கூறிய வசனம் நீக்கப்படுவதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இது குறித்து  இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய கோபத்தை பதிவு செய்துள்ளார். தணிக்கை குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை புற அழுத்தங்களால் OTT யில் இருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது என தெரிவித்துள்ளார் வெற்றிமாறன்.