கடைசி காலத்தில் பார்க்க கூட ஆள் இல்லை.. பசி பட்டினியால் உயிர் இழந்து தனுஷ் தந்தை என பரபரப்பை ஏற்படுத்திய கதிரேசன்.!

0
Follow on Google News

நடிகர் தனுஷ் தன்னுடைய மகன் என்று உரிமை கொண்டாடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த கதிரேசன் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். மதுரை மேலூரை சேர்ந்தவர்கள் கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர், இவர்கள் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது வீட்டை விட்டு ஓடி விட்டார்.

தற்போது டைரக்டர் கஸ்தூரிராஜாவின் வளர்ப்பு மகனாக உள்ளார். இந்த நிலையில் தங்களுக்கு வயதாகிவிட்டதால் பராமரிப்பிற்காக மாத உதவித்தொகையை நடிகர் தனுஷ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தள்ளுபடியான நிலையில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப் போராட்டம் நடத்தி வந்தனர்.

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்த போது, தனுஷ் சர்ச்சைக்குரிய பெறோர்களான கதிரேசன் தம்பதியினர் பெருத்த வேதனை அடைந்து இருப்பதாகவும் அவர்களுக்கு அறிவுரையும் அப்போது கூறி இருந்தனர், அதில் இருவருக்கும் இரு மகன்கள் இருக்கும் நிலையில் இந்த முடிவு மிகவும் தவறானது மேலும் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும்.

இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இவர்களை ஒன்றாக சேர்த்து வைக்கும் முயற்ச்சி செய்ய வேண்டும் எனவும், நாங்கள் வயதான காலத்தில் ஒன்றாக சந்தோசமாக வாழ்ந்து வரும் நிலையில் மகனே கலையரசா நீ உனது பிள்ளைகள் மனைவியுடன் சேர்ந்து ஒன்றாக வாழ வேண்டும் என கண்ணீர் மல்க கூறியுள்ளார் தனுஷின் சர்ச்சைக்குரிய பெற்றோர்களான கதிரேசன் மீனாட்சி ஜோடி.

இந்நிலையில் தற்பொழுது வரை தனுஷ் – கதிரேசன் இடையிலான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கதிரேசன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் உடல் நலம் தேறி வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இதனையடுத்து அவரது உடலானது திருப்புவனத்தில் உள்ள கதிரேசனின் மகள் வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. கதிரேசன் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், வழக்கின் விசாரணைக்காக அவரது DNAவை சேகரித்து பாதுகாக்க வேண்டும் எனக்கூறி அவரது மனைவி மீனாட்சி மற்றும் வழக்கறிஞர் டைட்டஸ் ஆகியோர் மருத்துவமனை முதல்வரிடம் ஏற்கனவே கோரிக்கை மனு அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் DNA மாதிரி எடுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது. இந்த நிலையில் தற்போது தனுஷ் தனது மகன் என நீதி கேட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுத்து வந்த கதிரேசன். – மீனாட்சி தம்பதியினரில் கதிரேசன் காலமானது அவரது குடும்பத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.