செலவுக்கு கூட பணம் இல்லை… சாப்பாட்டுக்கு கஸ்தூரி ராஜா என்ன செய்கிறார் தெரியுமா.? கைவிட்ட தனுஷ்..

0
Follow on Google News

நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் என் ராசாவே மனசிலே படத்தில் இயக்குனராக அறிமுகமான கஸ்தூரி ராஜா, முதல் படமே மிக பெரிய ஹிட் கொடுத்தது, தொடர்ந்து கிராமிய கதை அம்சம் கொண்ட பல படங்களை இயக்கிய கஸ்தூரி ராஜா 90 கால கட்டத்தில் முக்கிய இயக்குனராக இருந்தார். சொந்தமாக படம் தயாரிப்பில் இறங்கிய கஸ்தூரி ராஜா, மனைவி பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஓன்று தொடங்கி அதன் தயாரிப்பில் வெளியான படங்கள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

இதனால் சில காலம் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் கடனை அடைக்க வழியும் தெரியாமல் தத்தளித்து வந்த கஸ்தூரி ராஜா புதிய படம் ஒன்றை எடுத்து கடனை அடைத்து விட வேண்டும் என்கிற முயற்சியில், வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்தால் சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதால், பள்ளியில் படித்து கொண்டிருந்த தன்னுடைய மகனை ஹீரோவாக நடிக்க வைத்து மற்றொரு மகன் செல்வராகவனை உதவி இயக்குனராக அறிமுகம் செய்து எடுக்கப்பட்ட படம் துள்ளுவதோ இளமை.

இந்த படத்தின் வெற்றியை வைத்து தான் கஸ்தூரி ராஜா குடும்பத்தின் எதிர்காலமே இருந்தது, அந்த வகையில் படம் மிக பெரிய ஹிட் கொடுத்து கடனில் இருந்து மீண்ட கஸ்தூரி ராஜா, மேலும் இந்த ஒரே படத்தில் தன்னுடைய இரண்டு மகன்களுக்கு மிக பெரிய அங்கீகாரம் கிடைத்து, மிக குறுகிய காலத்தில் ஒரு மகன் நடிப்பில், மற்றொரு மகன் இயக்குனராக மிக பெரிய உயரத்துக்கு சென்றனர். ஆனால் அடுத்த சில வருடத்தில் சினிமாவில் மிக பெரிய சரிவை சந்தித்து செல்வராகவன் காணாமல் போனார்.

ஆனால் மறுபக்கம் ரஜினிகாந்த் மூத்த மகளை திருமணம் செய்து ரஜினிகாந்த் மருமகன் என்கிற செல்வாக்கை பயன்படுத்தி கொண்டு, சினிமாவில் அடுத்தடுத்து இடத்துக்கு மேல் நோக்கி சென்றார் தனுஷ். இந்நிலையில் கஸ்தூரி ராஜா இரண்டு மகள்கள், மூத்த மகன் செல்வராகவன் என மொத்த குடும்பமும் தனுஷை எதிர்ப்பர்தே தங்கள் வாழ்கை தேவையை பூர்த்தி செய்தனர், அதே போன்று தன்னுடைய வருமானத்தில் பெரும் தொகையை தன்னுடைய தாய், தந்தை, மற்றும் உடன் பிறப்புகளுக்கு செலவு செய்தார் தனுஷ்.

செல்வராகவனுக்கு படவாய்ப்பு இல்லை, கஸ்தூரி ராஜாவுக்கு எந்த ஒரு வருமானமும் இல்லை என்றாலும் தனுஷ் தேவைப்படும் போது பணம் தருவதால் அவர்களும் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் வாழ்ந்து வந்தனர். ஆனால் தனுஷ் அவருடை குடும்பத்திற்கு பணத்தை வாரி கொடுப்பது, அவருடைய மனைவி ஐஸ்வர்யாவுக்கு பிடிக்கவில்லை என்றும், இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்பொழுது மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நடிகர் தனுஷ், பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். மேலும் தற்போது ஏற்கனவே ஒப்பந்தம் செய்த படங்களின் படப்பிடிப்பு கூட பாதியிலே நிற்கிறது, தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான மாறன் படம் மிக பெரிய தோல்வியை சந்தித்து, அவருடைய மார்க்கெட் மிக பெரிய சரிவை சந்தித்துள்ளது. மேலும் சொந்தமாக படம் எடுக்க கையில் பணமும் இல்லை, அதே போன்று தனுஷை நம்பி கடன் கொடுக்கவும் யாரும் தற்பொழுது முன் வரவில்லை.

இப்படி மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்த பின்பு தன்னை காப்பாற்றி கொள்ளவும், மீண்டும் சினிமாவில் இழந்த இடத்தை தக்க வைத்து கொள்ள போராடி வரும் தனுஷ் முன்பு போல் தன்னுடைய தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் அண்ணன் செல்வராகவன் ஆகியோருக்கு பணம் கொடுத்து உதவ முடியாத சூழல் காரணமாக கண்டு கொள்ளாமல் கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது. அதே போன்று தனுஷ் இருக்கும் சூழல் அறிந்த அவருடைய தந்தை கஸ்தூரி ராஜா.

இனி மகன் தனுஷை எதிர்பார்த்து வாழ்கை நடத்த முடியாது என்பதை உணர்த்த கஸ்தூரி ராஜா, மேலும் தனது தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தொழில் அதிபரிடம் கடன் வங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது, அந்த கடனையும் அடைக்க வேண்டியிருப்பதால், சினிமாவில் நடிக்க முடிவு செய்து பட வாய்ப்புகள் தேடி வருகிறார், இந்நிலையில் தற்பொழுது இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தமாகி உள்ள கஸ்தூரி ராஜா அந்த படத்தில் நடிக்க அட்வான்ஸ் தொகையும் வங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்த சில மாதங்களில் தனுஷ் சினிமாவில் மிக பெரிய சரிவை சந்தித்து தத்தளித்து வரும் நிலையில் அவரது குடும்பமும் பொருளாதார ரீதியில் மிகப்பெரிய சிக்கலில் சிக்கி பரிதவித்து வருவதை பார்த்து சினிமா துறையினர் பரிதாபப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ராய் தான் வேண்டும்… அடம் பிடிக்கும் ரஜினிகாந்த் … டென்ஷனில் தயாரிப்பு நிறுவனம் என்ன செய்தது தெரியுமா.?