ரஜினி சொல்லியும் கேட்காமல் நீதிமன்றம் சென்ற ஐஸ்வர்யா… கடும் மன வேதனையில் ரஜினிகாந்த்….

0
Follow on Google News

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு பிரிந்து வாழப் போவதாக அறிவித்திருந்தனர். தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினரின் இந்த முடிவு ரஜினிகாந்தை மட்டும் இன்றி ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது. தற்பொழுது, இந்த தம்பதியினர் சட்டபூர்வமாக பிரிய வேண்டும் என்று விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும், இதனால் ரஜினிகாந்த் மனம் உடைந்து வேதனையில் இருப்பது பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யாவும் தனுஷும் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 17 வருடங்களாக கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வந்த தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி 2022 ஆம் ஆண்டு பிரிந்து வாழ போவதாக ரசிகர்களிடம் தெரிவித்திருந்தனர்.

தான் இயக்கிய இரண்டு படங்களும் சரிவர ஓடாத நிலையில் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஐஸ்வர்யா, தனுசை பிரிந்த பின்னர் மீண்டும் லால் சலாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். ரஜினிகாந்த்தும் தன் மகளுக்காக லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற காமியோ ரோலில் நடித்துக் கொடுத்தார். ஆனால் இந்த படமும் ஐஸ்வர்யா எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

தனது ஆசை மகள் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமின்றி சினிமா வாழ்க்கையிலும் நிறைய இன்னல்களை சந்திப்பதை கண்டு ரஜினி மன உளைச்சலில் இருக்கும் நிலையில், நேற்று தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். மகளும் மருமகனும் பேரன்களின் வாழ்க்கைக்காகவாவது ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று ரஜினி எண்ணி வந்த நிலையில், தற்போது இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து பெறுவதற்கு முயற்சி செய்யும் விஷயத்தை 73 வயதான ரஜினியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் எவ்வளவோ ரஜினி தன்னுடைய மகளிடம் எடுத்து தெரிவித்து, அதாவது உன்னுடைய மகன்களுக்காக பாரும்மா, விவகாரத்தெல்லாம் வேண்டாம், என ரஜினி சொல்லியும் கேட்காத ஐஸ்வர்யா, விவாகரத்து செய்தே தீருவேன் என பிடிவாதமாக இருந்து தற்பொழுது நீதிமன்றத்தை நாடியுள்ளார் என்கிறது சினிமா வட்டாரங்கள்.