குழந்தைகளுக்காக இறங்கி வந்த தனுஷ்… பிடிவாதமாக விவாகரத்து கேட்ட ஐஸ்வர்யா.. கடும் அப்செட்டில் ரஜினிகாந்த்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷ் ஆரம்பகாலத்தில் முதல் ஹிட் கொடுத்த படம் என்றால் காதல் கொண்டேன் திரைப்படம் தான். இந்த படம் சென்னை எக்மோரில் இருக்கும் ஆல்பர்ட் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. அந்த படத்தை பார்த்த ஐஸ்வர்யா, தனுஷுக்கு பூங்கொத்தை அனுப்பி வாழ்த்து தெரிவித்தார். தனுஷின் சகோதரியும், ஐஸ்வர்யாவும் தோழி ஆவர். எனவே தனுஷ் பதிலுக்கு அவரை வீட்டுக்கு அழைத்து தனது நன்றியை கூறியுள்ளார். அப்போது தான் இருவருக்கும் ஒரு காதல் ஆரம்பித்துள்ளது.

இதற்கிடையே தனுஷ்க்கும் இவர்க்கும் 2004ஆம் ஆண்டு திருமணமாது.. அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு பிறகு பிரிவில் நின்றது. இருவரும் பிரிந்தாலும் இதுவரை இரண்டு பேரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. அவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயன்றுவருவதாக கூறப்பட்டது.

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் ஏதோ வேகத்தில் பிரிந்துவிட்டார்கள். ஆனால் நிச்சயம் விரைவில் சேர்ந்துவிடுவார்கள் என்றே ரசிகர்கள் நினைத்தார்கள். தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பதாக பேச்சு கிளம்பிய நிலையில் விவாகரத்து பெற முடிவு செய்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து இருவரும் தங்களுடைய திருமண வாழ்வை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்துக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த நிலையில் இனியும் சேர வாய்ப்பே இல்லை என்று விவாகரத்து கோரியிருக்கிறார்கள். மனமொத்து விவாகரத்து கேட்டிருப்பதால் நீதிமன்றம் நிச்சயம் அவர்கள் விரும்பியபடியே தீர்ப்பு அளிக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷ் விவாகரத்து வேண்டாம்… சேர்ந்து வாழலாம் என்கிற ஆசையில் எவ்வளவோ இறங்கி வந்த போதிலும், ஐஸ்வர்யா விவாகரத்து முடிவில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. தனுஷை உருகி உருகி காதலித்து மட்டும் இன்றி, அவர் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆணிவேராக இருந்தவர் என்றால் அது ஐஸ்வர்யா தான். ஐஸ்வர்யாவுக்கு, தனுஷ் மீது இப்படி கோவம் வர காரணம், சில நடிகைகளுடன் தனுஷ் காட்டிய நெருக்கம் என கூறப்படுகிறது.

மற்ற விஷயங்களை அவர் சகித்து கொண்ட போதிலும், தனுஷ், மீண்டும் மீண்டும் செய்த சில விஷயங்களே வெறுப்பாக மாறி விவாகரத்து வரை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் அவர்கள் இரண்டு பேரும் மீண்டும் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது. இந்நிலையில் குழந்தைகள் நலன் கருதி மீண்டும் மனைவி ஐஸ்வர்யா உடன் இணைந்து வாழ தனுஷ் ஒரு கட்டத்தில் முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் ஐஸ்வர்யா தன்னுடைய முடிவில் எந்த மாற்றமும் இல்லை விவாகரத்து தான் ஊரே தீர்வு என விவாகரத்து செய்வதில் பிடிவாதமாக இருந்ததாக கூறப்படுகிறது. தனுஷ் பல கோடி சம்பளம் வாங்கினாலும், தந்தை ரஜினிகாந்த் சம்பாரித்து வைத்துள்ள பல கோடி சொத்து இருக்க நான் எதற்கு ஒருவரின் துணையுடன் வாழ வேண்டும், எனக்கு இருக்கிற சொத்துக்கு எனக்கு யார் துணையும் தேவையில்லை என்கிற ஐஸ்வர்யாவுக்கு இருக்கிற திமிர் தான் விவாகரத்து செய்வதில் ஐஸ்வர்யா உறுதியாக இருப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது. இருந்தும் இந்த விவாகரத்து முடிவில் ரஜினிகாந்த் கடும் அப்செட்டில் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.