இரவு பார்ட்டியில் தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி… மது விருந்தில் இருவரும் ஜோடியாக என்ன செய்தார்கள் தெரியுமா.?

0
Follow on Google News

கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி ஆந்திராவில் உள்ள ஒரே ஓட்டலில் தங்கி இருந்த நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் தங்கள் இருவரும் அவர்களின் 17 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு ஒருமனதாக பிரிவதாக அதிரடியாக அறிவிப்பை நள்ளிரவில் வெளியிட்டனர். இதன் பின்பு குழந்தைகள் நலன் கருதி இருவரையும் இணைத்து வைக்க, தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினரின் குடும்பத்தினரும் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் பிரிந்த ஐஸ்வர்யா- தனுஷ் தம்பதியினர் இருவரும் தங்கள் சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்த தொடங்கினார்கள். எநடிகர் ரஜினிகாந்த் செல்வாக்கை வைத்து தான் இதுவரை தனுஷ் சினிமாவில் வெற்றி பெற்றார், தற்பொழுது அவரது மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்துள்ளதால் இனி சினிமாவில் தனுஷ் காணாமல் போய்விடுவார் என்கின்ற விமர்சனம் பரவலாக பேசப்பட்டு வந்தது.

ஆனால், ரஜினிகாந்த் தயவால் நான் சினிமாவில் வெற்றி பெறவில்லை. எனக்கென தனித் திறமை இருக்கிறது, என்பதை நிரூபிக்கும் வகையில் மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்த பின்பு, சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் மிகப்பெரிய ஹிட் அடித்து வசூல் சாதனை படைத்துள்ளது. சமீப காலமாக சினிமாவில் மிகப்பெரிய சரிவை சந்தித்து வந்த தனுசுக்கு இந்த மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியர்களின் மூத்த மகன் யாத்ரா பள்ளியில் விளையாட்டு பிரிவில் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சியில் தாய்- தந்தை இருவரும் பங்கேற்றனர், இந்த நிகழ்ச்சியில் தனுஷ் -ஐஸ்வர்யா இருவரையும் பங்கேற்க கடும் முயற்சி செய்தவர்கள் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினரின் குடும்ப நண்பர்களான பின்னணிப் பாடகர் விஜய் ஜேசுதாஸ் மற்றும் அவருடைய மனைவி எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினர் மகனின் விளையாட்டு பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் பிரிந்த இந்த தம்பதியினர் இணைந்ததற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல் இரண்டு தரப்பிலும் வெளியாகவில்லை. மேலும் தற்பொழுது வரை தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் தனித்தனியாக தான் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவ்வப்போது இருவரும் ஏற்கனவே தங்கள் வசித்து வந்த சென்னை ஆர்யாபுரத்தில் உள்ள அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி சென்று ரகசிய குடும்பம் நடத்துவதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் திருச்சிற்றம்பல படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில்,மிக முக்கியமான தனக்கு நெருக்கமானவர்களை மட்டும் அழைத்து தனுஷ் இரவு பார்ட்டி விருந்து வைத்துள்ளார். இந்த விருந்தில் தனுஷின் குடும்ப நண்பரான விஜய் ஜேசுதாஸ் மற்றும் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர, இரவு பார்ட்டியில் மது விருந்தும் நடந்துள்ளது.

தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் உண்டு என கூறப்படும் நிலையில், இருவரும் ஜோடியாக சேர்ந்து அளவாக மது அருந்தி, நிதானத்துடன் சிறிது நேரம் ஜோடியாக தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் திருசிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காத பாடலை பாடி டான்ஸ் ஆடியுள்ளார்கள், அங்கே சுற்றி இருந்தவர்கள் இந்த நிகழ்வை கை தட்டி ஆரவாரம் செய்ததாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இரவு பாட்டி முடிந்ததும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தனித்தனி காரில் பிரிந்து சென்றார்கள் என்றும், மேலும் பிரிந்த இந்த தம்பதியினர், தற்பொழுது நண்பர்களாகவே தொடர்வோம் என்கின்ற ஒரு மனநிலையில் இருக்கின்றனர, மீண்டும் இருவரும் கணவன் மனைவியாக இணைவதால் இருவரின் சுதந்திரம் பாதிக்கப்படும் என்பதால் இருவரும் நண்பர்களாவே இருப்போம் என்பதில் இரண்டு தரப்பிலும் உறுதியாக இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.