பிடிவாதமாக அந்த விசயத்திற்கு நோ சொன்ன தனுஷ்… ஐஸ்வர்யாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் தங்களது திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு இருவரும் பிரிவதாக அறிவித்து, பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவர்கள் பிரிவதாக அறிவித்து எட்டு மாதங்கள் ஆன நிலையில், சட்டப்படி இருவரும் விவாகரத்து பெறவில்லை. இந்த நிலையில் இருவருக்கும் கடந்த இரண்டும் மாதங்களுக்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர், இவர்கள் பிரிவதற்கு முன்பு தங்கி இருந்த சென்னையில் உள்ள ஆர்யாபுரத்தில் உள்ள இவர்கள் வீட்டில் அடிக்கடி இருவரும் சந்தித்து ரகசியமாக குடும்பம் நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் விரைவில் இவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக இணைவது குறித்து அறிவிப்பு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா- தனுஷ் தம்பதியினரின் மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர் கலந்துகொண்ட, ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. இந்த நிலையில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் தம்பதியினர் மீண்டும் இணைந்து விட்டார்கள். கணவன் மனைவியாக மீண்டும் இணைந்து வாழ்வார்கள் என்ற செய்தி வெளியானது.

ஆனால் இது குறித்து விசாரித்ததில், தனுஷ் உடன் கணவன் மனைவியாக வாழ்வதற்கு ஐஸ்வர்யா விருப்பம் தெரிவித்தாலும், தனுசுக்கு மீண்டும் ஐஸ்வர்யாவிடம் கணவன் மனைவியாக வாழ விருப்பமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். ஆனால் ஒரு நல்ல நண்பர்களாக, ஒரு தோழியாக தங்களுடைய வாழ்க்கையை குழந்தைகள் நலன் கருதி தற்போது உள்ளது போல் தொடர்வோம் என்றும்.

கணவன்- மனைவி என்கின்ற ஒரு கண்டிஷனான வாழ்க்கையை வாழ விரும்பவில்லை. எனக்கான முழு சுதந்திரம் மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்த பின்பு கிடைத்துள்ளது. அதனால், கணவன்-மனைவி என்கிற பந்தத்தில் இணைவதற்கு விருப்பம் இல்லை என தனுஷ் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தேவை படும் போது இருவரும் அடிக்கடி சந்திக்கும் சென்னை அரியபுரத்தில் உள்ள வீட்டில் ரகசியமாக சந்தித்து கொள்வார்கள் என்கிறது சினிமா வட்டாரங்கள்.