பொன்னியின் செல்வன் சூட்டிங் ஸ்பாட்டில் விக்ரம்: வைரலாகும் போட்டோ

0
Follow on Google News

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிவரும் ‘பொன்னியின் செல்வன்’ படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் திரிஷா இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வைரலாக்கினார்.

இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் விக்ரம், படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கொத்தாக வளர்ந்த தலைமுடி, அடர்ந்த தாடியுடன் விக்ரமும், ரவிவர்மனும் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் அட்டகாசமாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அகில்யா என்ற கோட்டையில் விக்ரம், கார்த்தி, திரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வரும் மணிரத்னம், இன்னும் சில நாட்களில் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிடுவார் என்று கூறப்படுகிறது. அதன்பின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை படக்குழுவினர் தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராஜேஷ், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லெட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். லைக்கா நிறுவனமும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.