டேய் .. பன்னி… மாமா வேலை பார்த்து விளக்கு பிடித்தாயாடா…? பயில்வானை எச்சரித்த சினிமா பிரபலம்..

0
Follow on Google News

பிரபல சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், தொடர்ந்து சினிமா நடிகர் நடிகைகள் பற்றிய கிசு கிசுக்களை வெளியிட்டு வருகின்றவர், நடிகை கஸ்தூரி மிஸ் மெட்ராஸ் பட்டம் வாங்கியது அவர் அட்ஜெஸ்ட் செய்து தான் என்று பயில்வான் பேசியதற்கு, அவரை பன்னி என்று குறிப்பிட்டு கடுமையாக பதிலடி கொடுத்திருந்தார் நடிகை கஸ்தூரி. இந்நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் கே.ராஜன் யூ ட்யூபில் பேச பணம் கேட்பதால் அவரை யாரும் இப்ப பேச அழைப்பதில்லை என பயில்வான் பேசியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது, ஒரு பன்னி நான் யூடியூபில் பேசுவதற்கு பணம் கேட்பதாக சொல்கிறது. அந்த பன்னி நான் வைத்த பெயர் கிடையாது, நடிகை கஸ்தூரி வைத்த பெயர். அந்த பண்ணி நடிகை கஸ்தூரியை கூட மிக கேவலமாக பேசி இருக்கின்றது. நடிகை கஸ்தூரி இன்று நன்கு வளர்ந்துள்ளநடிகை. ஆனால் அவர் அட்ஜஸ்ட் செய்துதான் விருது பெற்றார் என்று இந்த பன்னி சொல்கிறது.

கொஞ்சம் கூட வெட்கம், மானம், ஈனம், ஒரு தாய் வயிற்றில் பிறந்தோமே என்றும், நமக்கு ஒரு பெண் இருக்கே, நம்ம மனைவியும் ஒரு பெண் தானே என்கிற எண்ணம் இல்லாமல், தாயுள்ளம் இல்லாத அரக்கன் தற்போது சினிமாவில் இருக்கின்ற அனைத்து சகோதரிகளையும், நடிகைகளையும் கீழ்தரமாக பேசுகின்றன். ஏதோ சில ரகசியங்களை இவன் வெளியிடுவது, கூட இருந்தே அனைத்தையும் செய்து கொடுத்த மாதிரி அதாவது டபுள் எம் ஏ (மாமா) வேலையை பார்த்தவன் மாதிரி பேசுகிறான்.

கே ராஜன் காசு கேட்கிறார், அதனால் எல்லா யூடியூப் சேனலும் அவரை ஒதுக்கி விட்டது என்று சொல்கிறான். டேய்… என்ன எதுக்குடா ஒதுக்கணும், நான் புண்ணியம் செய்வதற்காக காமராஜர் பெயரில் மெட்ரிகுலேசன் பள்ளி நடத்துகிறேன். நான் கஷ்டப்பட்டு காமராஜர் கொடுத்த இலவச கல்வியில் படித்தேன், என்னை போன்று கஷ்ட படும் மாணவர்களுக்கு படிக்க உதவும் வகையில் காமராஜர் பெயரில் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறேன்.

ஒரு கோயில் யானை குளத்தில் குளித்துவிட்டு நல்ல அலங்காரம் செய்து காலையில் கோயிலை நோக்கி செல்கிறது, அப்போது அவ்வழியாக ஒரு பன்றி சேற்றில் உருண்டு கொண்டிருக்கிறது, அந்தப் பன்றி கிட்டே சென்றால் தன் மீது சேறு பட்டுவிடும் என கோயிலை நோக்கி அந்த யானையை செல்கிறது. ஆனால் அந்தப் பன்றி தன்னைப் பார்த்து யானை பயந்து கொண்டு போகிறது என்று நினைக்கக் கூடாது.

ஒருத்தன் பத்தாயிரம் கொடுத்தா அதை வாங்கிக்கிட்டு நடிகைகளை பற்றி, இவன் என்னமோ விளக்கு பிடிச்ச மாதிரி பேசுறான். தம்பி வேண்டாம், உன் வீட்டில் உனக்கு பெண் இருக்கு, அம்மா இருக்கு, மனைவி இருக்கு தாய்மார்களை கேவலப் படுத்தாதே. சோறு சாப்பிடு, கண்டதை சாப்பிட வேண்டாம். என் உடம்பைப் பாரு எப்படி இருக்கு என்று காட்டினால், அட பன்றி கூடத்தான் கண்டதை தின்று கொழுத்து போயிருக்கின்றது என பயில்வானை வெளுத்து வாங்கினார் கே ராஜன்.

கள்ள காதல் விவகாரம்…. அடி தடியில் முடிந்த ஷங்கர் மகளின் திருமண வாழ்க்கை..! என்ன நடந்தது தெரியுமா.?