படப்பிடிப்புக்கு வராமல் அடம் பிடிக்கும் அர்ஜுன்.. நல்ல மனிதன் தான் … இருந்தாலும் இப்படி ஒரு திமிர் கூடாது..

0
Follow on Google News

தமிழ்த்திரையுலகில் ஆக்சன் கிங்காக வலம்வருபவர் நடிகர் அர்ஜுன். இவர் ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரும் கூட. ஜெய்ஹிந்த் திரைப்படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் அறிமுகமான அர்ஜுன் தற்போது வில்லனாகவும் முக்கியம் வாய்ந்த கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். மணிரத்னம் படத்தின் மூலம் வில்லனாக நடிக்க ஆரம்பித்த அர்ஜுன் அவ்வப்போது சில படங்களில் தலைகாட்டி வருகிறார்.

அர்ஜுனின் சமீபத்திய படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை என்பது சோகமான விஷயம். அதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து அர்ஜுன் நடித்து வெளிவந்திருந்த பிரெண்ட்ஸிப் திரைப்படம் வரவேற்பை பெற்றிருந்தபோதும் வசூல் ரீதியாக கைகொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழில் தீயவர் கொலை நடுங்க எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் 90 சதவிகித படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளதாக படக்குழு தெரிவிக்கிறது. ஆனால் அர்ஜுன் நடிக்கவேண்டிய அந்த காட்சிகளில் நடிக்க வரமாட்டேன் என அர்ஜுன் கூறியதாக படக்குழு புலம்பிவருகிறது.

நடிகர் அர்ஜுன் தனது மகளை வைத்து ஒரு படத்தை இயக்கிவருகிறார். அதன் படப்பிடிப்புப்பணிகளுக்காக மகளுடன் ஹைதராபாத்தில் இருக்கிறார். அதனால் தீயவர் கொலை நடுங்க திரைப்பட குழுவினரை ஹைதராபாத் வரசொல்லிவிட்டாராம். ஆனால் அவர்வந்தால் அவர் ஒருவர்க்கு மட்டுமே பொருட்செலவு ஆகும்.

ஒட்டுமொத்த படக்குழுவும் ஹைதராபாத் செல்வதென்றால் பொருட்செலவு அதிகமாகுமே என படக்குழுவினர் கூறியதற்கு தேவையெனில் இங்கு வாருங்கள் என கறாராக கூறிவிட்டாராம் அர்ஜுன். இதனால் கேமராமேன் ஆஸ்டன், டைரக்டர் உட்பட 90 பேர் வீணாக பணத்தை செலவழித்து ஹைதராபாத் சென்றுள்ளாராம். இதனால் தயாரிப்பாளர் தரப்பு புலம்பிவருகிறது. தமிழில் அவ்வளவு பெரிய முன்னணி நடிகர் இல்லை அர்ஜுன். ஒருசில படங்களே ஹிட் கொடுத்திருக்கிறார். அதற்க்கே இவ்வளவு பில்டப் கொடுக்கிறாரே என படக்குழுவினர் நொந்துபோய் புலம்பிவருகின்றனராம்.

ஐஸ்வர்யா ராய் தான் வேண்டும்… அடம் பிடிக்கும் ரஜினிகாந்த் … டென்ஷனில் தயாரிப்பு நிறுவனம் என்ன செய்தது தெரியுமா.?